(இ-ள்,)
மன்னன்-அரசனாகிய மாரிதத்தன், ஆணையின் -(தனது) ஆணையால், மா மயில்-சிறந்த
மயில், வாரணம்-கோழி, சூகரம்-பன்றி, ஆடு--, எருமை--, இன்னசாதி விலங்கில்-இத்தகைய
இனத்தைச் சேர்ந்த விலங்குகளில், இரட்டைகள் - ஆணும்பெண்ணுமாகிய இரட்டைகளின்,
துன்னு தொகை-நெருங்கிய கூட்டம், பின்னிவந்து-பிணைக்கப் பட்டு வந்து, பிறங்கின-(எதிரே)
தோன்றினவற்றை, கண்டனன்-கண்டான். (எ-று,)
மன்னவன் மயில்முதலிய விலங்கினங்களைக்
கண்டனனென்க. ‘துன்னு’ என்பதனைத் ‘தொகை’ யென்பதனோடியைத்து, ‘ துன்னுதொகை‘
என்றாக்கி, அதனை மயில் முதலிய ஒவ்வொன்றனோடும் கூட்டுக. ‘மயில் வாரணந்துன்னு
சூகர மாடெருமைத்தொகை யின்ன சாதிவிலங்கு’ என்றது, பறவைமுதலியனவும் விலங்கினத்தன
வாதலா லென்க. இதனை, ‘விலங்கானே னாகலினால் விலங்கினேன’ என்று (கம்ப. சடாயுகாண்,22)
சடாயுகூற்றாகவந்திருத்தலால் அறியலாகும். இரட்டையாவன - ஒருசூலில் தோன்றிய இரண்டு
உயிர்கள். வடநூலார், ‘யமலம்‘ என்பர்.
(16)
21. |
யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை |
|
ஈன மில்பலி யாக வியற்றினால் |
|
ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் |
|
ஆன பூசனை யாற்றுத லாற்றென. |
(இ-ள்,)
(விலங்கினங்களைக் கண்ணுற்ற அரசன்), யான்-, இவ்வாளினில்-இவ்வெற்றிவாளால், ஈனம்
இல்-(அங்கவிலக்கணங்களில்) குறைவு இல்லாத, மக்கள் இரட்டையை - மக்களுள் இரட்டையரை,
பலியாக இயற்றினால்-பலிபூசையாகச் செய்தால், (அதன் பிறகு), ஏனை மானுயர்-மற்ற
மாந்தர்கள், இவ்விலங்கினில் - இவ்விலங்கினங்களால், ஆன பூசனை-தேவிக்கு உரிய
பலி பூசை, ஆற்றுதல் - இயற்றுதலை, ஆற்ற-செய்வார்களாக, என-என்று கருதி; (தந்தீகென
என்று அடுத்த கவியில் தொடரும்.)
|