இதுவுமது
27. |
வில்லின தெல்லைக் கண்ணால்
நோக்கிமெல் லடிகள் பாவி |
|
நல்லருள் புரிந்து யி்ர்க்கண்
ணகைமுத லாய நாணி |
|
யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு
மாகி |
|
நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே. |
(இ-ள்.)
நல் அற அமுதம் உண்டார் - நல்லறமாகிய அமிர்தத்தையுண்ட (இருவரும்), வில்லினது எல்லை
-(தம் எதிரில்) ஒருவிற்கிடைதூரம், கண்ணால் நோக்கி-கண்களால் கூர்ந்து நோக்கி,
மெல் அடிகள் பாவி - அடிகளை மெல்லப்பெயர்த்து வைத்து, உயிர்க்கண் - உயிர்களிடத்து,
நல்லருள் புரிந்து - நல்ல அருளுடன் விரும்பிக்காத்து, நகை முதலாய நாணி - நகைத்தல்
முதலிய குற்றங்களின்றியடங்கி, இல்லவர் - இல்லறத்தார், எதிர்கொண்டு ஈயின்-முறைப்படி
எதிர்கொண்டு (தூய உணவு) கொடுப்பார்களாயின், எதி்ர் கொள் உண்டியரும் ஆகி-(விதிப்படி)
ஏற்றுமண்ணுவாம் என்ற நியம்முடையவராகி, வீதியூடு -(அவ்விராசமாபுரத்து) வீதியிடையே,
நடந்தனர் - நடந்து சென்றனர்.(எ-று.)
இளைஞரிருவரும், முறைப்படி உணவேற்கச்
சென்றன ரென்க.
வில்லினது எல்லை நான்கு முழம்,
நெடிது நோக்கின் இடையிலுள்ள சிற்றுயிர் கட்புலனாகா தாதலின், ஒருவிற்கிடையே கூர்ந்து
நோக்கிச் செல்வாராயினர். பூமி அதிர்படலின்றி மெல்ல அடி பெயர்த்து நடந்தன ரென்பார்.
‘மெல்லடிகள் பாவி‘ என்றார். பாவுதல் - அடிபெயர்த்து வைத்தல். உயிர்க்கண் நல்லருள்புரிந்து
எனமாறுக. ஓரறிவுமுதலாகவுள்ள உயிர்களனைத்தையும் இரட்சிப்பதனால்,
‘நல்லருள் புரிந்து உயிர்க்கண்‘ என்றார். நகைமுதலாய என்றவை அறுவகைத்துவர்ப்புக்களை.* அவை-நகைப்பு, விருப்பு,
*
|
இவற்றை வடநூலார் - ஹாஸ்யை, ரதி, அரதி, சோகம்,
பயம், ஜுகுப்ஸை என்பர், இவை நோகஷாயம் (மெல்லிதாயகஷாயம்) எனவும், கோபம்,
கர்வம், மாயம், லோபம், என்னுங் கஷாயம் நான்கினுக்கும் காரணம் எனவுங் கூறுவர்.
|
|