வெறுப்பு, சோகம், அச்சம், அருவருப்பு
என்பன. நாணுதல்-இங்கு, அடங்குதல். எதிர்கோடலென்பது, நவபுண்யக்ரமத்தில் முதலது.
நவபுண்ய க்ரமங்களாவன;-முனிவர் உணவு உண்ணற்கு வரும்போது அவர்களை எதிர்கொள்ளல்,
உச்சஸ்தானத்தி லமர்வித்தல், பாதங்கழுவுதல், பாதபூசை செய்தல், வணங்குதல், மனச்சுத்தியுடைமை,
வாசனசுத்தியுடைமை, காயசுத்தியுடைமை, ஆகாரசுத்தியுடைமையென்பனவாம்.
இதனை,
|
“தொடிக்கையாற் றொழுது வாழ்த்திக் |
|
தூமணி நிலத்து ளேற்றிப் |
|
பொடிப்புனை துகிலி னீக்கிப் |
|
புகழ்ந்தடி கழீஇய பின்றை |
|
அடுத்தசாந் தகிலி னாவி |
|
யாய்மல ரருச்சித் தானார் |
|
கொடுப்பர்நா லமிர்த மூன்றிற் |
|
குணம்புரிந் தடங்கி னார்க்கே” |
என்று (சீவக.2827,8.) சிந்தாமணியாசிரியர் கூறுவதனால் அறியலாகும்.
|
“எதிர்கொள லிடநனி காட்டல்
கால்கழீஇ |
|
அதிர்பட வருக்சனை யடியின் வீழ்தரல் |
|
மதுரநன் மொழியொடு மனம்மெய்
தூயராய் |
|
உதிர்கநம் வினையென வுண்டி யேந்தினார்” |
என்று (சீவக.2828-ன் உரையில்)
நச்சினார்க்கினியர் கூறுவதும் ஈண்டு அறியத்தகும். தூய உணவாவன:-தேன், புலால்,
கள் முதலிய குற்றம் நீங்கியவைகளாம். இதனை ‘ஊனொடுதேனுங் கள்ளு மின்றிநன் றாய
வுண்டி, தானுவந்து ,,,,,,,,,,ஈதல் தானமாம்‘ (மேரு.349.) என்ற வாமனமுனிவர் கூற்றா
லுணரலாகும். இத்தூயவுணவினை வடநூலார் ஏஷணாதோஷம் முதலிய நாற்பத்திரண்டு குற்றங்களின்
நீங்கிய பவித்திரவுணவு என்பர். விரிவு, ஸ்ரீபுராணத்துட் காண்க.
|