|
‘ஆதியாயுலகியல்பை யளித்தாய் நீயே |
|
அருந்தவனா
யறம்பகர்ந்த வறிவ னீயே |
|
காதியா யிருவினையுங் கடிந்தாய் நீயே |
|
கணமீறா ரடியேத்துங் கடவு ணீயே |
|
போதியாய் பொருளளவு மானாய்நீயே |
|
பொறிவாயி லைந்தவித்த புனித
னீயே |
|
சேதியாய் நிலவுகுணச் செல்வனீயே |
|
ஸ்ரீவர்த்தமான னெனுந் தீர்த்த னீயே‘ |
(ஜிவசம்.
29)
எனவும்,
|
‘ஆதியந்தளப் பரிய வருகந்த பகவர்த
மறஞ்சால் |
|
சேதியம்
புக்கவர்தந் திருந்தடிகளைப் பெருந் துதிசேர |
|
போதியிற்
பணிந் திருந்தாள்‘ |
எனவும்,
|
‘அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பு நான்குந் |
|
திருந்திய
குணத்தினார்க்குச் சேதிக்கு வீதியாகும்‘ |
|
|
(மேரு.
729.)
எனவும் கூறியிருத்தலாலும், ஈற்றுச்செய்யுளின்
உரையில் ‘சேதிக்கு-மோக்ஷத்திற்கு‘ என்று பொருள் எழுதியிருப்பதனாலும் அறிக.
சிந்தை-தியானம்; யோகம் எனவும் வழங்கும்.
அது விரிவகையால் பலவிதமாயினும் தொகைவகையால்மூன்று வகைப்படும். அவை-அசுபோபயோகம், சுபோபயோகம், சத்தோபயோகம்
என்பன. அவற்றுள்,
1. அசுபோபயோகம்; - தீயவாஞ்சை, கோபம் முதலிய எண்ணங்களுடையதும், பிறவித்துன்பத்திற்குக்
காரணமாகியதுமாகும். இது, ஆர்த்த தியானம், ரௌத்ரதியானம் என்ற இரண்டும் உடையது.
|