இளைஞர் புன்முறுவல் செய்தல்
58. |
கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால் |
|
இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு
மியைந்து நிற்ப |
|
நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார். |
|
மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல்
செய்தார். |
(இ-ள்.) இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் (சாமுத்ரிகம் என்ற
அங்க இலட்சண நூலுள் கூறியவாறு) உடலின் இலக்ஷணம் அமைந்த இளைஞரிருவரும், கொலைக்களம்
குறுகிநின்றும்-(மாரியின் பலிபீடத்தின் எதிரிலுள்ள) கொலைக்களத்தை அணுகி நின்றும்,
குணங்கள் தம்மால்-நற்காட்சி முதலிய நற்குணங்களை யுடையாமல், குலுங்கலர்-(உடலும் மனமும்)
நடுங்காதவராய், இயைந்து நிற்ப-(மரணத்திற்கும்) ஒருப்பட்டுநிற்க, (அவ்வமயம் ஏனைமாந்தர்
இளைஞரைநோக்கி), ‘நிலத்து இறை மன்னன் - உலகத்தலைவனான இம்மன்னன், ‘நெடிதுவாழ்க
என உரைமின் என்றார் - நீடூழிவாழ்வானாக என்று பல்லாண்டு கூறுமின'; என்றனர்,
மலக்குஇலா மனத்தர் - கலக்கம் இல்லாத நெஞ்சமுடைய இளைஞரிருவரும், தம்வாய்வறியது
ஓர் முறுவல் செய்தார்-(தங்களின் முற்பவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிற்கு வரத்)
தம் வாயினின்றும் சிறியதொரு புன்முறுவல் புரிந்தனர். (எ-று.)
கொலைக்களம் குறுகியும் மரணத்திற்கு அஞ்சாது
நிற்கும் இளைஞரை ஏனைமாந்தர் நோக்கி அரசனுக்குப் பல்லாண்டு கூறுக என, இளைஞர் புன்னகை புரிந்தனரென்க.
கொலைக்களம் குறுசியும் அஞ்சாமல்
நிற்கும் திண்மை குணத்தின்பாற் பட்டதாகலின், ‘குலுங்கலர் குணங்கடம்மால'; என்றார்.
நற்காட்சியுடன் நல்லறிவும் நல்லொழுக்கமும் உடையராதலின், ‘குணங்கள் எனப் பன்மையாகக்
|