கூறினார். பலியிடுவதைக் கருதி
மாரி மகிழ்ந்து அரசனுக்கு அருள் புரிவாள் என்ற மூடநம்பிக்கையால் ஏனைமாந்தர் அங்ஙனம்
வாழ்த்துமாறு கூறினர். மரணகாலத்தும் அஞ்சாமல் நின்றமையால், ‘மலக்கிலா மனத்தர்';என மீண்டுங்
கூறினார். ‘மலக்கு'; என்னுஞ்
சொல் கலக்கம் என்ற பொருளில் வருதலை, ‘பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே'; என்ற
குறுந்தொகை 194 ஆவது செய்யுளடியான் அறியலாம். ‘வறிது சிறிதாகும'; என்பது
தொல்காப்பியம் இனி, வறிது பயினின்மை எனலுமாம். (54)
இளைஞர்
மன்னனை வாழ்த்துதல்
59. |
மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா |
|
தறவியன்1 மனத்தை
யாகி யாருயிர்க் கருள் பரப்பிச் |
|
சிறையன பிறவி
போக்குந் திருவற மருவிச் சென்று |
|
நிறைபுக முலகங்
காத்து நீடுவாழ்க கென்று நின்றார். |
(இ-ள்.)
மறவியின் மயங்கி-கள்ளிற்போல (மோஹநீயத்தால்) மயங்கி, வையத்து உயிர்களை
வருத்தஞ் செய்யாது - உலகிலுள்ள உயிர்களைத் துன்புறுத்தாமல், அறம் இயல் மனத்தைஆகி
- அறம் நிறைந்த மனமுடையவனாகி, ஆர்உயிர்க்கு அருள்பரப்பி - அரிய பல்லுயி்ர்க்கும்
அருளைப் பரவச் செய்து, சிறை அன பிறவிபோக்கும் - சிறைக்கூடம் போன்ற பிறவியினை
நீக்கும், திருவறம் - (இறைவனருளிய) திருவறத்தில், மருவிச்சென்று - பொருந்தி நடந்து,
புகழ்நிறை உலகம் காத்து -புகழ்நிறையும் உலகத்தைக் காத்தளித்து, நீடுவாழ்க-நீடுழிகாலம்
வாழ்க, என்று நின்றார் - என்று அரசனுக்கு அவ்விளைஞர் ஆசி கூறி நின்றார்.
(எ-று.)]
|