- 102 -

கூறினார்.  பலியிடுவதைக் கருதி மாரி மகிழ்ந்து அரசனுக்கு அருள்  புரிவாள் என்ற மூடநம்பிக்கையால் ஏனைமாந்தர்  அங்ஙனம் வாழ்த்துமாறு கூறினர்.  மரணகாலத்தும் அஞ்சாமல் நின்றமையால்,  ‘மலக்கிலா  மனத்தர்';என மீண்டுங் கூறினார். ‘மலக்கு'; என்னுஞ் சொல்  கலக்கம்  என்ற பொருளில் வருதலை, ‘பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே'; என்ற குறுந்தொகை 194 ஆவது செய்யுளடியான் அறியலாம்.  ‘வறிது  சிறிதாகும';  என்பது தொல்காப்பியம் இனி,  வறிது பயினின்மை எனலுமாம்.               (54)

இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

59. மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா
  தறவியன்1 மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச்
  சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று
  நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார்.

(இ-ள்.) மறவியின் மயங்கி-கள்ளிற்போல (மோஹநீயத்தால்)  மயங்கி,  வையத்து  உயிர்களை வருத்தஞ் செய்யாது - உலகிலுள்ள உயிர்களைத் துன்புறுத்தாமல், அறம் இயல் மனத்தைஆகி - அறம்  நிறைந்த மனமுடையவனாகி,  ஆர்உயிர்க்கு  அருள்பரப்பி - அரிய பல்லுயி்ர்க்கும் அருளைப் பரவச் செய்து, சிறை  அன பிறவிபோக்கும் - சிறைக்கூடம் போன்ற பிறவியினை நீக்கும், திருவறம் - (இறைவனருளிய)  திருவறத்தில், மருவிச்சென்று - பொருந்தி நடந்து,  புகழ்நிறை  உலகம் காத்து -புகழ்நிறையும் உலகத்தைக் காத்தளித்து, நீடுவாழ்க-நீடுழிகாலம் வாழ்க, என்று  நின்றார் - என்று  அரசனுக்கு  அவ்விளைஞர்   ஆசி கூறி நின்றார். (எ-று.)]

1 பாடம். அறவி