- 105 -

குறித்து  நின்றது, ‘தீண்டா விடுதலரிது‘ (நாலடி. 109) என்புழிப்போல.    (56)

அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய

வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்

61.  இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர்  விளக்கி னென் [கொல்
  நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள்  கூறு கென்ன
  அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே
  நடுக்கம தின்றி  நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்.

   (இ-ள்.) இடுக்கண் வந்து உறவும் - (உங்கள்  உயிருக்கே) இறுதி வரவும், எண்ணாது (அதனை ஒருபொருட்டாகக்) கருதாது, எரிசுடர்  விளக்கின் - எரிகின்ற விளக்கின் சிகை நடுங்குவது போல, நடுக்கம் ஒன்று இன்றி - நடுக்கம் சிறிது மின்றி, நம்பால் - நம்மிடத்தில், நகுபொருள் என் கொல் - நீவிர்  சிரித்தக்காரணம் என்னை? கூறுக-இயம்புக, என்ன - என்று  (அரசன்) கேட்க, அடுக்குவது அடுக்கும்ஆனால் - ஒன்றன்மேலொன்றாகப் பிணித்துள்ள பழவினை (பயனீயுங்கால்   உதயமாகி)  வெளிவருமாயின்,அஞ்சுதல் பயன் இன்று என்று- (அதற்கு)  அஞ்சுவதனால் உண்டாகும் பயன் சிறிதும் இல்லை என்று  கருதி, நடுக்கம் அது இன்றி நின்றாம் - நடுக்கம் என்பது சிறிதும் இலரானோம்,  நல் அறத் தெளிவு சென்றாம் - திருவறத்தைத் தெளிதலாகிய நற்காட்சியை அடைந்துளோம். (எ-று.)     இடுக்கணை நினையாது சிரித்தது யாது காரணம் என்று வினவிய அரசனுக்கு, யாம் நற்காட்சி யுடையேமாதலின் அச்சமிலரானோம் என்றன ரென்க.

சுடர்-சிகைவு; விளக்கின் கொழுந்து, விளக்கு  எரியும் போது சிகை  காற்றிலசைவது போல  நடுங்கும் நடுக்கம்.