களை, சிந்தித்தல் மரபாதலின், ‘இனையன நினைவுறீஇ';என்றார். தனக்குரிய இராஜ்ஜியத்தைத் தன்புத்திரனுக்கே அளித்தலும்,
எம்மைப்போலவே சில காலம் அரசுபுரிந்துப்பின் துறவறமேற் கொள் என்று நீதி புகலுவதும்
முறையாதலின், ‘யசோதரன்... தலைவனாகென... முடிகவித்து'; என்றார். ‘நிலமகள் தலைவன்'; என்றது பூமி தேவிக்கு நாயகனாகக் கூறும் மரபு நோக்கியாகும்.
கனை-செறிவு; நெருக்கம். புனை வளை-வளையலுக்கு அழகைத் தருகின்ற சந்திரமதி யெனலுமாம்.
மதிமதி-சந்திரமதி,மதி-சந்திரன். புத்திசேனன் என்று கூறு மிடத்து, ‘திங்கள் விரவிய
பெயரினாற்கு'; (சீவக.671) என்று திருத்தக்கதேவரும் கூறியது காண்க.
புலம்புதல் - தனித்துக்துயருழத்தல்.
(10)
அசோகன்
துறவு
83. |
குரைகழ லசோகன்
மெய்க் குணதரற் பணிந் |
|
தரைசர்க ளைம்பதிற்
றிருவர் தம்முடன |
|
1உரைசெய லருந்தவத்
துருவு கொண்டுபோய் |
|
வரையுடை வனமது
மருவி னானரோ. |
(இ-ள்.)
குரைகழல் அசோகன் - ஒலிக்கின்றவீர கண்டையணிந்த வேந்தனான அசோகன், மெய்குணதரன்பணிந்து-மெய்யொழுக்க
முள்ள குணதரமுனிவரை வணங்கி (அறங் கேட்டு), அரைசர்கள் ஐம்பதிற்று இருவர் தம்முடன்-உடன்
வந்த அரசர்கள் நூற்றுவரோடும், உரை செயல் அருந்தவத்து உருவு கொண்டு - புகழ்ந்து கூறுதற்
கரிய தவவேடம் கொண்டு, போய்-(சிறிது காலம்சங்கத்திலிருந்து பிறகு பிரிந்து) சென்று,
வரையுடைவனமது மருவினா - மலைகள் செறிந்த வனத்தை நண்ணித்தவமியற்றனான்.
அசோகன், அரசர் நூற்றுவருடன் குணதரரென்றமுனிவரிடம் துறவு பூண்டு தவமியற்றினான் என்க.
|