யசோதரன்,
நிலமகளின் திலகம் போன்ற உஞ்சயினியிலிருந்து அரசர் பலரையும் தன் அடிப்படுத்திப்
பேராசனானா னென்க.
இரு நிலம்-விசாலமான பூமி; வளமிக்க பூமியுமாம். சிறந்த
நகரத்தை நிலமகளுக்குத் திலகம் எனக் கூறும் வழக்கினை சூளாமணி முதலியவற்றா லறியலாகும்.
அடிப்படுத்தல் - வணங்கச் செய்தல், குரு மேன்மையெனினுமாம். குவலயம்-நிலமாகிய வட்டம்.
(12)
மன்னனின்
மனமாட்சி
84. |
திருத்தகு
குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு |
|
மருத்தெறி
கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி |
|
உருத்தெழு சினத்திற்
சென்ற வுள்ளமெய் மொழியோடொ |
|
அருத்திசெய்
தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். |
(இ-ள்.)
திருத்தகு குமரன்-திருமகள் தங்குதற்குத் தகுதிவாய்ந்த குமரனாகிய யசோதரன், செல்வச்
செருக் கினால்-, நெருக்கப்பட்டு-அடர்ப்புண்டு, மருத்து எறி கடலின்-புயற்காற்றினால்
மோதப்பட்ட கடல் பொங்குவது போல, பொங்கி மறுகிய மனத்தனாகி-காமம் முதலிய உட்பகை
ஆறினாலும் பொங்கிக் கலங்கிய மனமுடையவனாகி, உருத்து எழு சினத்திற் சென்ற-மிக்கெழுகின்ற
கோபத்தின் பாற் பட்ட, உள்ளம் மெய் மொழியோடு ஒன்றிமனம்மெய் மொழிகளில் ஒன்றுபட்டு
(நிற்க), அருத்த காமத்து அருத்தி -செய்து பொருளின்பங்களிலே வேட்கை மிகக் கொண்டு,
அறத்திறம் அறத்துறந்தான் - அறத்தின் வகைகளை முற்றும் கைவிட்டொழுகுவானாயினான்.
(எ-று.)
செல்வச் செருக்குடைய யசோதரன், கலக்கத்தால் பொருளின்பங்களிலேயே மயங்கி அவற்றிற்கு
காரணமாகிய அறத்தை அறவே மறந்துழன்றன னென்க.
திருத்தகு குமரன் லக்ஷ்மிகடாக்ஷம் பொருந்தியவன்.பொருள் சேர் (த்திரு)க்கும் பெருமிதத்தால்
ஏற்படும்
|