- 162 - |
பட்டு, வெகுளியால்-வெருட்சியால், விம்மிய மிடற்றளாகி - விம்மிய கண்டத்தை உடையவளாய்,
தெருள்கலாள் - தெளிவற்றவளாய், உரையும் ஆடாள்-பேச்சும் அற்றவளாய் மூர்ச்சித்து,
சிறிதுபோது அசைய-சில நிமிஷம் தளர்ந்திருக்க, மருளி-மருளுடையோனாகிய அப் பாகன்,
மயங்கி-ப்ரமித்து, மாதர் மலரடி சென்னிவைத்தான்- அவ்வமிர்தமதியின் மலர்போலும்
பாதத்தில் தன் சிரசை வைத்து வணங்கினான். (எ-று.)
|
மிதிப்புண்ட
அரசி மூர்ச்சித்துச் சிறிதுநேரம் தளர்வுற்றிருக்க, பாகன் அவளடியில் வணங்கினானென்க.
|
அடர்த்தல்
- தாக்கல். சந்திரன் சூரியன் முதலியவற்றைக் கடவுளாகக் கூறும் வழக்குப்பற்றி,
‘மதிக்கடவுள்‘ என்றார். ‘கனைகதிர்க் கடவுள்‘ (சீவக. 1943) என்றது அறிக.
வெருளி-வெருட்சி. உரத்துக் கதறினால்தன் மறை புலப்படுமென்றஞ்சி மெதுவாக விம்மினா
ளாதலின், ‘விம்மிய மிடற்றளாகிய‘ என்றார். தெருள்-அறிவு, மருள்-மயக்கம்.
தான், அசை. இப்பாட்டின் கருத்துக்களை,
|
“சமஸ்கிருத
சுலோகம் இல்லை”
|
என்று வாதிராஜர் கூறிய (115,16-ஆவது) சுலோகங்களிலும் அறியலாகும்.
(42)
அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்காரணம்
கூறல்
115. |
தையலாள் மெல்லத்1
தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி |
|
வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக்
கிறைவன் றன்னேர் |
|
விடையவா சனத்தி னும்ப ரரசவை
யிருந்து கண்டாய் [றாள். |
|
வெய்யபா வங்கள்2
செய்தேன் விளம்பலன் விளைந்த தென் |
|
|