(இ-ள்.) தையலாள்-தையலாகிய
அமிர்தமதி, மெல்லத் தேறி - மெதுவாகத் தெளிந்து, சாரனை - சோரநாயகனை மகிழ்ந்து
நோக்கி-மகிழ்ச்சியோடு பார்த்து, வெய்ய நீ முனிவு செல்லல்-விருப்பமுள்ள நீ கோபஞ் செய்யாதே; மேதினிக்கு இறைவன்தன்னோடு-பூமிக்கு அரசனாகிய யசோதரனோடு, ஐய ஆசனத்தின்
உம்பர்-அழகிய (அர்த்த) ஆசனத்தின்மீது, அரச அவை இருந்து-அரசசபையில் வீற்றிருந்ததனால்,
வெய்யபாவங்கள் செய்தேன் - கொடிய பாபம் செய்தவளாயினேன்; விளைந்தது - நிகழ்ந்ததை,
விளம்பலன் - முன்னரே சொல்லிற்றிலேன், என்றாள் - என்று சொன்னாள். (எ-று.)
தையல், பாகனை
நோக்கி, ‘கோபியாதே‘ என்று கூறி, காலந்தாழ்த்ததன் காரணம் கூறினா ளென்க.
சாரன்-ஜாரன்; வடசொல். ஜாரன்-சோர
நாயகன். ‘மேதினிக்கிறைவன்‘ எனவே, தனக்கு இறைவனாகக் கருதாமை வெளியாயிற்றென்னலாம்.
பாகனோடு கூட வேண்டிய காலத்து கூடாததையும் அரசனோடு அமர்ந்திருந்ததையும் தொகுத்து
‘வெய்ய பாவங்கள் செய்தேன்‘ என்றாள். கண்டாய், முன்னிலை அசை.
(43)
அரசியின்
உறுதிமொழி
116. |
பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி
தரந்தை தீர்க்குங் |
|
கற்பகங் கரந்து கண்டார் கையகன்
றிடுத லுண்டோ |
|
எற்பகங் கொண்ட காத லெனக்கினி
நின்னின் வேறோர் |
|
சொற்பகர்ந் தருளு காளை1
துணைவரா பவரு முண்டோ. |
(இ-ள்.)
காளை-இளையோய், அகம் - தன்னிடத்தே, பொற்பு கழுமி-அழகு நிரம்பப்பெற்று, யாவும்-(தன்னை
அடைந்த உயிர்கள்) எல்லாவற்றையும், இனிது புரந்து-இனிமை பெறக் காப்பாற்றி, அரந்தை
தீர்க்கும்-அவற்றின் துன்பத்தைத் தீர்க்கின்ற, கற்பகம்-கற்பகத்
|