தருவை, காந்து கண்டார்-(ஒருவருக்கும் தெரியாமல்) மறைந்து சென்றுகண்டவர்கள், கையகன்றிடுதல்
உண்டோ - அதனை விட்டுவிடுவதும் உண்டோ? (இல்லை, அதுபோல), இனி-இப்போது, எற்பு
அகம் கொண்ட - எலும்பினிடத்தும் ஊடுருவிச்சென்றுள்ள, காதல் - காதலுடைய, எனக்கு--,
நின்னின் - உன்னைவிட, வேறோர் துணைவர் - மற்றொரு துணைவராக, ஆபவரும் உண்டோ-ஆகுபவரும்
இருக்கின்றனரோ? சொல் பகர்ந்து அருள்-(இதுபற்றிய) ஒரு சொல்லைக் கூறுவாயாக. (எ-று.)
காதல் நிறைந்த யான் உன்னை விட்டிடேன்; எனக்கு உன்னைப்போன்ற துணை வேறொருவரில்லை
யென்றாளென்க. (44)
மறைந்து நின்ற மன்னனின் செயல்
117. |
என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச்
சீறிக் |
|
கொன்றிவர் தம்மை வாள்வாய்க்
கூற்றுண விடுவ லென்றே |
|
யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது
கரத்து வாளும் |
|
சென்றிடை விலக்கி நின்றோர்
தெளிந்துணர் வெழுந்ததன்றே |
(இ-ள்.) என்றலும் - என்று (தன்தேவி) கூறியதும், ஏனை மன்னன்-இவர்களின்
வேறாய் மறைந்திருந்த மன்னவன், எரிஎழ விழித்து-(கண்களில், தீப்பொறி பறக்க
விழித்து, சீறி-கோபித்து, இவர்தம்மை- இவ்விருவரையும், வாள்வாய் கொன்று -வாளால்
வெட்டி வீழ்த்தி, கூற்று உண இடுவல் என்று-காலனுக்கு விருந்து இடுவேன் என்று ஒன்றினன்
- ஒருப்பட்டான் ; உள்ளத்து
உணர்ந்தஅது - அவன் உள்ளத்தில் உணர்ந்த அதனை, கரத்துவாளும்
- அவன்கையில் இருந்தவாளும், உணர்ந்தது-உணர்ந்துகொண்டது, அன்றே -அப்பொழுதே,
ஓர் தெளிந்த உணர்வு - ஒரு தெளிவுபெற்ற உணர்ச்சி, இடைசென்று-(ஒன்றிநின்ற காத்திற்கும்
மனத்திற்கும்) இடையே சென்று, விலக்கி நின்று -அச்செயலைத் தடுத்து நின்று, எழுந்தது-ஓங்கிற்று.
(எ-று.)
|