மன்னன் சீறி அவ்விருவரையும் கொல்லக் கருதிய போழ்து
ஓர் நல்லுணர்வு தோன்றி அவ்வெண்ணத்தை மாற்றிற் றென்க. வாளும் உணர்ந்தது என்றது
வாளை எடுத்தான் என்று குறிக்கும். இவ்வாறு கருவியின்மேல் ஏற்றிக் கூறியது உபசாரவழக்கு.
(45)
118. |
மாதரா ரெனைய
ரேனும் வதையினுக் குரிய ரல்லர் |
|
பேதைதா னிவனும்
பெண்ணி னனையனே பிறிது மொன் |
|
டேதிலார்
மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண் |
|
றீதுசெய் சிறுபுன்
சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். |
(இ-ள்.)
மாதரார்-பெண்கள், எனையர்ஏனும் - எத்துணைக் கொடுமை புரிந்தவராயினும், வதையினுக்கு
-கொலைத்தண்டனைக்கு, உரியர் அல்லர்-தகுதியுற்றவராகா, பேதை இவனும் - அறிவில்லாதவனாகிய
இப் பாகனும்,பெண்ணின் அனையனே-(பிறப்பால் ஆணாயினும் தன்மையினால்) பெண்களைப்
போன்றவனே; (அதுவுமன்றி), பிறிதும் ஒன்று உண்டு-மற்றொரு காரணமும் உண்டு (அதாவது),
ஏதிலார் மன்னர் - பகைவரான அரசர்களின், சென்னி இடுதலுக்கு-தலைகளை வெட்டுதற்கு,
உரிய - தகுதி வாய்ந்த, வாளின்-இவ் வெற்றிவாளால், தீது செய்-கொடுமைகளைச் செய்கின்ற,
சிறு புன் சாதி-மிக அற்பமான சாதியினரை, சிதைத்தலும்-கொல்லுதலும், திறம் அன்று
-வீரம் ஆகாது, என்றான்-என்று அரசன் எண்ணினான். (எ-று)
மாதர் கொலைக்கு
உரிய ராகார்; இப்பேதையும் அனையனே ஆகலின், இவர்களைக் கோறல் வீரம் அன்றென்று
அரசன் கருதினா னென்க.
மாதர் - காதல்; மாதரார் - காதலை யுடையவர். ஈண்டுப்பெண்கள்
என்னும் பொதுப்பொருளில் வந்துளது. (46)
119. |
இனையன பலவஞ்
சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற் |
|
புனைவளை யவர்கள்
போகம் புறக்கணித் திட்டு மீண்டே |
|
கனவரை யனைய
மார்பன் கடிகம ழமளி யேறித் |
|
தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான். |
|