- 165 -

       மன்னன் சீறி அவ்விருவரையும் கொல்லக் கருதிய போழ்து ஓர் நல்லுணர்வு தோன்றி அவ்வெண்ணத்தை மாற்றிற் றென்க.  வாளும் உணர்ந்தது  என்றது  வாளை எடுத்தான் என்று குறிக்கும்.  இவ்வாறு கருவியின்மேல் ஏற்றிக் கூறியது உபசாரவழக்கு.                       (45)

118. மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர்
  பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன்
  டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண்
  றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான்.

 (இ-ள்.)  மாதரார்-பெண்கள்,  எனையர்ஏனும் - எத்துணைக் கொடுமை புரிந்தவராயினும்,  வதையினுக்கு -கொலைத்தண்டனைக்கு,  உரியர் அல்லர்-தகுதியுற்றவராகா, பேதை இவனும் - அறிவில்லாதவனாகிய இப் பாகனும்,பெண்ணின் அனையனே-(பிறப்பால் ஆணாயினும் தன்மையினால்) பெண்களைப் போன்றவனே; (அதுவுமன்றி), பிறிதும் ஒன்று உண்டு-மற்றொரு காரணமும் உண்டு (அதாவது), ஏதிலார் மன்னர் - பகைவரான அரசர்களின், சென்னி இடுதலுக்கு-தலைகளை வெட்டுதற்கு, உரிய - தகுதி வாய்ந்த, வாளின்-இவ் வெற்றிவாளால், தீது செய்-கொடுமைகளைச் செய்கின்ற, சிறு புன் சாதி-மிக அற்பமான சாதியினரை, சிதைத்தலும்-கொல்லுதலும், திறம் அன்று -வீரம் ஆகாது, என்றான்-என்று அரசன் எண்ணினான்.  (எ-று)

மாதர் கொலைக்கு உரிய ராகார்;  இப்பேதையும் அனையனே ஆகலின்,  இவர்களைக் கோறல் வீரம்  அன்றென்று அரசன் கருதினா னென்க.

மாதர் - காதல்; மாதரார் - காதலை யுடையவர்.  ஈண்டுப்பெண்கள் என்னும் பொதுப்பொருளில் வந்துளது.             (46)

119. இனையன பலவஞ் சிந்தித் திழிப்பொடு பழித்து நெஞ்சிற்
  புனைவளை யவர்கள் போகம் புறக்கணித் திட்டு மீண்டே
  கனவரை யனைய மார்பன் கடிகம ழமளி யேறித்
  தனிமுனி களிறு போலத் தானினை வெய்து கின்றான்.