குடிப்பிறப்பின் மேன்மையை, இடிய நூறும்-கெடும்படி அழிக்கும்;
மண்ணிய புகழை-தூய்மையான கீர்த்தியை, மாய்க்கும் - அழிக்கும்; வரும்பழி - வருகின்ற
பழிச் சொற்களை, வளர்க்கும் - மிகுதியாக்கும்; மானத் திண்மையை; மானத்தின்
வன்மையை, உடைக்கும்-கெடுக்கும்; ஆண்மை -ஆண்மைத்
தன்மையை, திருவொடு-செல்வத்தோடு,
சிதைக்கும்-அழித்துவிடும், சிந்தை-மனத்தை, கண்ணொடு - கண்களோடு, கலக்கும் - கலங்கச்
செய்யும்,என்றான்-என்று சிந்தித்தான். (எ-று.)
காமம், நல்லெண்ணத்தையும்
உயர்குடிப் பிறப்பையும்புகழையும் மானத்தையும் செல்வத்தையும் கெடுத்து,பழியை வளர்த்து
மனத்தையும் கண்களையும் கலக்கும் என்று கருதினானென்க.
இனி ‘நடைப்படுகாமம்‘
என்றதனால், இழிதகவினை யுடைய காமம் இவ்வாறு கேடு விளைக்கும் என்று கொள்க.
இதுவுமது
121. |
உருவினொ டழகு
மொளியமை குலனும் பேசின் |
|
திருமக ளனைய
மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் |
|
கருமலி கிருமி
யன்ன கடைமகற் கடிமை செய்த |
|
துருமதி மதனன்
செய்கை துறப்பதே சிறப்ப தென்றான் |
(இ-ள்.)
பேசின்-சொல்லுமிடத்து, திருமகள் அனைய மாதர் இவளையும்-திருமகளைப்போன்ற அழகுடைய
பெண்ணாகிய இவளையும், உருவினொடு -சிறந்த வடிவத்தோடு, அழகும் -அழகையும், ஒளி அமைகுலனும்-பெருமை
பொருந்திய உயர்குடிப் பிறப்பையும், சிதைய-கெடும்படி, சீறி-கோபித்து, கரு மலி கிருமி
அன்ன-கருவில்மிகுந்த புழுவைப் போன்ற, கடைமகற்கு-இவ் விழிமகனுக்கு, அடிமை செய்த-அடிமைப்
படுத்திய, துருமதி மதனன்-கெட்ட அறிவினையுடைய மன்மதனது, செய்கை-செயலை, துறப்பதே-கைவிடுவதே,
சிறப்பது-உயர்வுடையதாகும், என்றான்-என்றெண்ணினான். |