ஏறே, ஐய, தோன்றல் என்பன அன்புபற்றி வந்த விளிகள்.
‘மணிமருளுருவம்'; என்றமையின், மணி என்பதுஈண்டு (சிவந்த) பதுமராகமணியைக் குறிக்கும். ‘நெஞ்சம் கடுத்தது காட்டு முகம'; என்பதனால் இவன் முகவாட்டமே மனவாட்டத்தை உணர்த்திற்றுஆகலின்,
‘இது என்கொல்'; என்றாள். ‘துணியலென்'; என்பது, தன்மை ஒருமை வினைமுற்று. (55)
அரசன்
அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு
உள்ளுறையாகத் தெரிவித்தல்.
128. |
விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே |
|
மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக |
|
கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ |
|
தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான் |
(இ-ள்.)
இறைவி-அரசியே, விண்ணிடை விளங்கும்-வானில் ஒளிர்கின்ற, காந்தி மிகு கதிர் -
ஒளிமிக்க கிரணங்கள், மதியம் தீர்ந்து - (காந்தி மிளிர்வதற்குக் காரணமாகிய)
சந்திரனைவிட்டு நீங்கி, மழுங்க-(தன் ஒளியும்)மழுங்க, மண்ணிடைச் சென்று-இம் மண்ணுலகத்திற்குப்போந்து,
மறை யிருள் பகுதி சேர - (எல்லாவற்றையும்) மறைக்கின்ற இருளின் பாகத்தைச் சேர,
கங்குல் - இரவில், கனவினில் - சொப்பனத்தில், கண்ணிடை கண்டது உண்டு -(என்) கண்களால்
கண்டேன். அஃது - அக்காட்சி, எண் உடை -ஆராய்ச்சியைப் பொருந்தியுள்ள, உள்ளந்
தன்னுள் - என்மனத்தகத்தே, ஈர்ந்திடுகின்றது - துன்புறுத்து கின்றது. என்றான் - என்று
கூறினான். (எ-று.)
சந்திரகாந்தி சந்திரனை விட்டு நீங்கிப் பூமியில் இருளைச் சேரக் கனவிற் கண்டது
உண்டு. அது என் உள்ளத்தை ஈர்ந்திடுகின்றது என்றானென்க.
ஈண்டு மன்னன் தன்னை மதியமாகவும் மனைவியைக்காந்திமிகு திராகவும் அட்டபங்கனை மறையிருட்
பகுதி
|