- 174 -

ஏறே, ஐய, தோன்றல் என்பன அன்புபற்றி வந்த விளிகள். ‘மணிமருளுருவம்'; என்றமையின், மணி என்பதுஈண்டு (சிவந்த) பதுமராகமணியைக் குறிக்கும்.  ‘நெஞ்சம் கடுத்தது காட்டு முகம'; என்பதனால் இவன் முகவாட்டமே மனவாட்டத்தை உணர்த்திற்றுஆகலின், ‘இது என்கொல்'; என்றாள்.  ‘துணியலென்'; என்பது, தன்மை ஒருமை வினைமுற்று.           (55)

அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு

உள்ளுறையாகத் தெரிவித்தல்.

128.  விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே
  மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக
  கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ
  தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான்

(இ-ள்.) இறைவி-அரசியே, விண்ணிடை விளங்கும்-வானில் ஒளிர்கின்ற, காந்தி மிகு கதிர் - ஒளிமிக்க கிரணங்கள், மதியம் தீர்ந்து - (காந்தி மிளிர்வதற்குக் காரணமாகிய) சந்திரனைவிட்டு நீங்கி, மழுங்க-(தன் ஒளியும்)மழுங்க, மண்ணிடைச் சென்று-இம் மண்ணுலகத்திற்குப்போந்து, மறை யிருள் பகுதி சேர - (எல்லாவற்றையும்) மறைக்கின்ற இருளின் பாகத்தைச் சேர, கங்குல் - இரவில், கனவினில் - சொப்பனத்தில், கண்ணிடை கண்டது உண்டு -(என்) கண்களால் கண்டேன்.  அஃது - அக்காட்சி, எண் உடை -ஆராய்ச்சியைப் பொருந்தியுள்ள, உள்ளந் தன்னுள் - என்மனத்தகத்தே, ஈர்ந்திடுகின்றது - துன்புறுத்து கின்றது. என்றான் - என்று கூறினான். (எ-று.)

சந்திரகாந்தி சந்திரனை விட்டு நீங்கிப் பூமியில் இருளைச் சேரக் கனவிற் கண்டது உண்டு.  அது என் உள்ளத்தை ஈர்ந்திடுகின்றது என்றானென்க.

ஈண்டு மன்னன் தன்னை மதியமாகவும் மனைவியைக்காந்திமிகு திராகவும் அட்டபங்கனை மறையிருட் பகுதி