|
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்1 |
|
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான். |
(இ-ள்.)
உறுபொருள் நிலைமை தன்னை - (அறிதற்கு) உற்ற உயிர் முதலிய பொருள்களின் நிலைமையினை,
உற்று உணர்வு -உள்ளவாறு உணர்தல், அறிவு ஆகும் - நன்ஞானம் ஆகும்: அறிபொருள்
அதனின் - அறிந்த அப்பொருள்களின். தூய்மை - தூய தன்மையில் (உண்மைத் தன்மையில்),
அகத்து எழும் - மனத்தில் தோன்றும், தெளிவு - --, காட்சி - நற்காட்சியாகும்:
நறுமலர் பிண்டி நாதன் -வாசனையுள்ள மலரையுடைய பிண்டியின் கீழமரும் ஆதிபகவன் அருளிய,
நல்அறப் பெருமை தன்மேல்இறுகிய மகிழ்ச்சி - சிறந்த அறிவு காட்சி இரண்டின் சீர்மையிலும்
முதிர்ந்த மகிழ்வுடன் பொருந்திநிற்றல், இதனது பிரிவும் ஆகும் - இறைவனருளிய அறத்தின்
பிரிவாகிய ஒழுக்கமும் ஆகும், என்றான் - என்று கூறினார். (எ-று.)
அறிவது ஞானம்,
அதனைத் தெளிவது தரிசனம், ஞான தரிசனமே நல்லறம்: அவ்வறத்தில் மிகுந்த மகிழ்வோடு
நிற்றல் ஒழுக்கம் என்றாரென்க.
இதுவும் முன்வருஞ்
செய்யுளும் ஒரு தொடர். தூய்மை - குற்றம் இல்லாத தன்மை. தெளிவு - தெளிதல்: நம்புதல்.
உள்பொருளிதுவென வுணர்தல் ஞானமாம், தெள்ளிதி னப்பொருள் தெளிதல் காட்சியாம்,
விள்வற விருமையும் விளங்கத் தன்னுளே, ஒள்ளிதிற் றரித்தலையொழுக்க மென்பவே‘ (சீவக:
2845) ‘ உரைத்தவிப் பொருளின் மெய்ம்மை யுணர்வது நல்ல ஞானம், புரைப்பறத்தெளிதல்
காட்சி பொருந்திய விரண்டு மொன்றிற், றரித்தல் நல் லொழுக்கமாகும்‘ (மேரு, 107).
இச்செய்யுட்கள் ஈண்டு ஒப்புநோக்கற் பாலன.
பிண்டி - அசோகு: இது இறைவன்சிறப்புவகைகளுள் ஒன்று.
|