(இ-ள்.) இன்னணம்
- இவ்வண்ணம், அரச செல்வத்து யசோமதி செல்லும் நாளில் - ராஜசெல்வத்தில் யசோமதி
வேந்தன் இன்பம் நுகரும் நாளில், பொன்இயல் அணிகொள் புட்பாவலி எனும் பொங்குகொங்கை
- திருமகளனைய அழகுவாய்ந்தவளும் புட்பாவலி யென்னும் ழழழபெயருடையபொலிவுறும் தனங்களையுடையவளுமான அரசமாதேவி,
இன்இயல் - இனிய இயல்பினையுடைய, இரட்டையாகும் இளையரை - இரட்டைப்பிள்ளைகளை,
ஈன்று - பெற்று, சில் நாள் பின்னும் - சில காலத்திற்குப் பின்னரும், பேதை-பேதையாகிய
அவள், ஓர் சிறுவன் தன்னை - ஓர் ஆண்மகவை, பெற்றனள் ---, (எ-று.)
அரசமாதேவி,
முதலில் இரட்டைப்பிள்ளைகளையும் பின்னர் ஓர் ஆண்மகவையும் பெற்றாளென்க,
பொன்இயல் அணி - பொன்னாலாகிய ஆபரணமெனினுமாம். இரட்டையாகும்
இளையருள் ஒருவர் ஆண்: மற்றவர்பெண். இது முன்னர் அறியலாகும். பேதை - பெண் பொங்கு
கொங்கை - அன்மொழித் தொகை. தான், அசை.
253. |
அன்னவர் தம்முள் முன்னோ1
னபயமுன் னுருசி தங்கை |
|
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் |
|
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் |
|
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும். |
(இ-ள்.)
அன்னவர் தம்முள் முன்னோன் - அவ்விரட்டையருள் முன் பிறந்தவன், அபயமுன் உருசி
- அபயருசி என்பவன்: தங்கை - அவனுடைய தங்கையாகிய,அன்னம் மெல் நடையினாளும் அபயமுன்
மதி என்பாள் ஆம் - அன்னத்தின் நடைபோலும் மெல்லிய நடையினையுடையளாகிய அபயமதி
யென்பவளாவாள்: அவர் வளரும்நாளுள் - அவ்விருவரும் வளர்ந்துவரும் நாட்களில்,பின்
பிறந்தவன் - பின்னர்ப் பிறந்தவனாகிய, நிறம்கொள்பைந்தார் இன்இளங் குமரன்
நாமம் - நன்னிறமுடைய புதிய பூமாலையுடைய இனிய இளையோனதுபெயர், இசோதரன் என்பது
ஆகும் - யசோதரன் என்பதாம்.
|