- 271 -

அம்மக்கள் அபயருசி, அபயமதி, யசோதரன் என்னும்பெயரினர் (என்று அபயருசி கூறினான்) என்க.

அபயமென்ற பதத்தை முன்னாலுடைய உருசி,அபயருசி.  (யசோ. 25, 76) அபயமுன் மதி என்பதற்கும்இங்ஙனமே கூறிக்கொள்க.  யசோதரன் என்பது, பாட்டன் பெயர்.  அவ்யசோதரனே இக்காப்பியத் தலைவன்.  (34)

  *254 பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
  வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று  மன்னர்க்
  குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
  அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன். 

(இ-ள்.) அரசிளங்குமரன் - யசோதரன், பரிமிசைபடை பயின்றும் -குதிரையேறிச் செய்யும் போர்த்தொழிலில்பழகியும். பார் மிசை தேர் கடாயும்  -  பூமியில் தேரைச்செலுத்தியும்,  வரிசையில் - முறைப்படி, கரிமேல் கொண்டும் -யானையேறிச் செய்யும் வேற்படை பயின்றும்,  வாள்தொழில்பயின்றும் - தரையில் நின்று  செய்யும் வாட்போர்  முதலியபோர்த்தொழிலில் பழகியும், மன்னர்க்கு உரிய அத்தொழில்களோடு - அரசருக்குரிய அப்போர்த்தொழில் பலவற்றோடு, கலைகளின் செலவை ஓர்ந்தும் - (அறுபத்து நான்கு) கலைஞானங்களின் முடிவையும் விளக்கமாக அறிந்தும்,  செல்நாள் -செல்லும் நாளில், அடுத்தது கூறல் உற்றேன் - நிகழ்ந்தவற்றை கூறலுற்றேன் (என்று அபயருசி கூறினான்).

யசோதரன் நாற்படையும் பயின்று பல்கலையறிவும் பெற்றானென்க.

யசோதரன் பருவமெய்திக் கலைகளை யுணர்ந்தானென்றமையின், அபயருசி, முன்னரே கலைகள் முதலியன உணர்ந்

  *  

 

 

தமிழிலுள்ள அச்சுப் புஸ்தகங்களில், இச்செய்யுளின் பின் நான்காஞ் சருக்கம் முடிந்தது என்று உளது.  ஆயினும், ஓலைச்சுவடிகளில் அவ்வாறு இல்லை.  முதனூலாகிய வடமொழியசோதர சரிதத்திலும் இல்லை.  அவற்றைப் பின்பற்றி நூல்முடிவுவரை நான்காஞ் சருக்கமாகவே கொள்ளப்பட்டுளது.