திருந்தான் என்று கொள்ளப்படும். மிசை - மேல். கடாவுதல்
- செலுத்தல். வரிசை - முறை கிராமம்.
(35)
255. |
நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ |
|
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப |
|
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல் |
|
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான். |
(இ-ள்.)
நூல் படு வலைப் பொறி முதல் - (உயிர்கள் படுதற்குக் காரணமான) நூலால் சமைத்த
வலையாகிய யந்திரங்கள் முதலாகவுள்ள, கருவி நூற்றோடு - படைக்கருவிகள் பலவற்றுடன்.
ஏற்று - கைக்கொண்டு, இடை எயிற்று ஞமலிக்குலம் இரைப்ப - இடையே (கூரிய) பற்களையுடைய
வேட்டை நாய்களின் கூட்டம் குரைக்க, நாற் படைகடல்நடு - நால்வகைச் சேனைப்படைகளாகிய
கடலின் நடுவே, நடுச்செய் நமனேபோல் - ( பிராணிகள் திறத்தில்) நடுவு நிலையுடனே
தன் தொழிலைச் செய்கின்ற யமனைப்போல, அரசன் - வேந்தனாகிய யசோமதி, வேல் படை
பிடித்து - வேலாயுதத்தைக் கையில் ஏந்தி, வேட்டையின் விரைந்தான் - வேட்டையாடுதற்கு
விரைந்து சென்றான். (எ-று.)
அரசன், சேனையுடன் வேட்டைக்குச் சென்றானென்க
பொறி - பிராணிகளை அகப்படுத்தும் பொறி : யந்திரம்.
கருவி, வேட்டைக்கு வேண்டிய கருவிகள்: குந்தம் ஈட்டி முதலியன. நூறு - ஈண்டு பலவென்னும்
பொருளது.ஏற்றிடை யென்பதை இடை ஏற்று என மாற்றி, பிராணிகளை இடையில் எதிர்த்து
எனினுமாம். நாற்படை: யானை, தேர், குதிரை, காலாள் என்பன. சேனைகளைக் கடலாகக்
கூறுதல் மரபு. ஞமலி: திசைச்சொல். யமனுடைய பெயர் நடுவன்: சமவர்த்தி எனவும் கூறப்படும்.
(36)
256. |
இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு் மியற்கைச் |
|
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும் |
|
பதத்தயன் மதக்களி றெனப்படிம1
நிற்பக் |
|
கதத்துட னிழித்தடு கடத்திடை2
மடுத்தான் |
|