- 317 -

என்னும் - --, துறவினுக்கு அரசன் - மாதவத் தலைவர், இந்நாள் - இன்று, அரும் கடி கமழும் - அருமையான மணம் வீசும், சோலை அதனுள் - இந்நகர்ப்புறம்பேயுள்ள சோலையில், வந்து - சங்கமுடன் (குழாத்துடன்) வந்து, இனிது இருந்தான் - மகிழ்வோடு தங்கியிருந்தார்.  (எ-று.)

சுதத்தமுனிவர் சங்கமுடன் இந்நகரின்கண் எழுந்தருளியுள்ளாரென்று அபயருசி கூறினானென்க.

அருங்கல மும்மை - இரத்தினத் திரயம்.  அதிசயம் மனப்பர்யய ஞானம் முதலிய  அதிசயம்;  (மேரு. 1100), நோன்மை - தவம்.  குழு - சங்கம், துறவிகளின் கூட்டம். ‘பெறற்கரும்குணம்‘ ஏனையோரால் பெறுதற்கரிய குணம்: எண்பத்துநான்குலக்ஷம் குணங்களில் குறையாத எனினுமாம்.  ‘வந்து மாநகர்ப் புறத்தோர் வளமலர்ப் பொழிலுள்விட்டு, (யசோ.24) அனசனத்தவம் ஏற்றதும், இஞைர் சரியைக்குச் சென்றதும், சண்டகருமன் அவர்களைப் பிடித்துச் சென்றதும் ஒருநாளிலேயே நிகழ்ந்தவனவாதலின், ‘இந்நாள் '  என்றார்.  நின்னாடு எனவும் பாடம்.            (90)

310.  அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
  தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
  எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
  அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.

(இ-ள்.) அனசனம் அமர்ந்த சிந்தை அருந்தவன் - அனசனத் தவத்தில் அமர்ந்த தூய சிந்தையின ராகியசுதத்தமுனிவர், இசோமதிக்குத் தனயர்கள் தம்மை நோக்கி - யசோமதியரசன்மக்களாகிய அபயருசி அபயமதி என்னும் க்ஷுல்லக விரதிகளை நோக்கி (நீவிர்), தரியலீர் - அனசனதவத்தை மேற் கொள்கலீர்; (ஆதலின்), சரியை போமின் என - சரியைக்குச் செல்லுங்கள் என்று கட்டளையிட, அவர் - அவ்விருவரும், இறைஞ்சி- (தம் குருவை) வணங்கி, இந்நகரத்து - இந்நகரத்தினுள், மெல்ல வந்தார் - (பிறஜீவன்கள் வருந்தாவண்ணம் நோக்கி)  மெல்லென நடந்து வந்தனர்;  அரச - -- ! , எம்மை - எங்களை, அனையவராக - அவ்விருவருமே யாக, அறிக - அறிவாயாக, என்றான் - என்று அபயருசி புகன்றான். (எ-று.)