|
திருவார்
பாண்டி நன்னாட்டில்
திகழும்
தெற்கூர் பதிச்செல்வர்
தெய்வப்
பற்றும் தமிழ்ப்பற்றும்
சிற்பக்
கலையிற் பெரும்பற்றும்
உருவாய்
வந்த அருங்கலைஞர்
உழைப்பால் ஆலை
பலநிறுவி
உழைப்போர்க்
கென்றும் வாழ்வளித்த
ஒப்பில்
மதுரைத் தொழிலதிபர்
பெருகும்
இளைஞர் நிலையுயரப்
பெரிய
கலைக்கல் லூரிகளும்
பேணும்
தொழில்நற் பள்ளிகளும்
பிறவும்
அளித்த பெருவள்ளல்
திருத்த
முறநற் றமிழ்வளர்த்த
சைவ
சமயப் பேரறிஞர்
தியாக ராசர்க்
கிந்நூலைச்
சிறப்பாய்
உரித்தாக் கிடுவேனே.
|