1. இயற்கைப் புணர்ச்சி 15. | தன்னயந் தெளித்தலுந் தலைப்பிரி வச்சமும் இன்னியல் வன்பொறை யெய்துத லருமையும் உயிரெனக் கூறலு மாற்றினன் பெயர்தலும் செயிர்தபு காதற் றெய்வப் புணர்ச்சி. |
(எ-து.) சொல்லப்பட்ட பாகினுள் தெய்வப்புணர்ச்சியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்செய்வினை காரணமாகக் கண்ணுற்றுப் புணர்ந்த பின்பு தலைமகன் நயப்புணர்த்தலும் தெருட்டலும், பிரிவச்சமும், வன்பொறையும் எய்துதலருமையும், உயிரென்றலும் ஆற்றிப் பெயர்தலு மெனப் பட்டன தெய்வப் புணர்ச்சியாமென்றவாறு. 1. | “கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் | 5. | நறியவு முளவோநீ யறியும் பூவே?’ (குறுந்-2) | என்பது நயப்புணர்த்தியது. | 2. | “யாயு ஞாயு மாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல | 5. | அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே’ (குறுந். 40) | என்பது தெளித்தல். | 3. | இனையல் வாழி பிரிவொன் றிலனே நனைமலர் நறும்பூங் கோதை அமையே னின்னையா னகன்ற ஞான்றே”(1) (களவியற். 25, மேற்.) | என்பது பிரிவச்சம், | 4. | “1ஆற்றினன் மன்னோ நெஞ்சே பிரியின் ஆற்றா ளிவளென வழுங்கின மாக ஆற்றா நிலைமை கைவிட் டாற்றா ளாயின ளாயிழை யதற்கே”(2) என்பது வன்பொறை. |
1. இறை. 2, உரை |