பக்கம் எண் :
 
38சிதம்பரப்பாட்டியல்

பகைபோன் றதுதுறை, பரிவா யினகுறி
நகையிழந் ததுமுக, நனிநா ணிற்றுளந்
தகையிழந் ததுதோ, டலைசிறந் ததுதுயர்
புகைபரந் ததுமெய், பொறையாகின் றென்னுயிர்.

             இவை இருசீரோரடியெட்டம் போதரங்கம்.

அதனால்---தனிச்சொல்.

இனையது நிலையா லனையது பொழுதா
னினையல் வாழி தோழி துனைவாற்
பனியொடு கழிக வுண்கண்
என்னொடு கழிகவித் துன்னிய நோயே”.

இது, தரவிரண்டுந் தாழிசையாறும தனிச்சொல்லும்  அராகம் நான்கும்
பெயர்த்தாறுதாழிசையும்   தனிச்சொல்லும்    எட்டம்போதரங்கவுறுப்பும்
தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று நான்கடியாய் ஈற்றுக்கலிக்கோதப்பட்ட
ஆறுறுப்பும்  மிக்குங்  குறைந்தும் பிறழ்ந்தும்  மயங்கியும் வந்தமையால்
மயங்கிசைக்       கொச்சகக்கலிப்பா.         இனியாசிரியத்தினோடும்
வெண்பாவினோடும் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா வருமாறு:-
  

“காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா
டாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா
னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற்
பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம்
வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி
யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே;
அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத்
தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங்
கானக னாடன் மகன்;
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
வள்ளி கீழ்விழா வரைமிசைத் தேன்றொடா
கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்க
ரல்ல புரிந்தொழுக லான்;
காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின்
வாங்காமை மென்றோட் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையருந்
தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்;