என்பது சூத்திரம்.“ ஆந்தளைசீர்கெடிலிகரவுகரத்தேய்வொற்றுமாம்.” என்பது, தளையுஞ்சீருங் கெடவந்தவிடத்துக் குற்றயலிகரமுங் குற்றியலுகரமும் ஒற்றாம்; உம்மையால ஒற்றல்லாமலுமாம்; “தளைசீர்கெடி” லென்பதனை முதனிலைத்தீபமாக்கிக்கொள்க; மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். ”அலகுபெறாவளவு” எ-து, உயிரளபெடை ஒரோவிடங்களிலே நீக்கப்படும்.“ஐ ஒளக்குறுமைகுறிலாம்” எ-து, ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும் குற்றெழுத்தாம்; “ஏய்ந்தவுயிரோரளபு மீரளபுமாகி யீரசையாமூவசையாம்” எ-து, உயிரளபெடையானது, ஓரளபெழுந்தால் ஈரசையாம்; ஈரளபெழுந்தால் மூவசையாம்;“செய்யுட்க ளோசைசிதையுங்கா லீரளபும், ஐயப்பா டின்றி யணையுமாம்-மைதீரொற், றின்றியுஞ் செய்யுட்கெடினொற்றை யுண்டாக்குங், குன்றுமே லொற்றளபுங் கொள்” என்றார் பூதபுராணமுடையாரும். “ஒற்றளபுகுறினேர், சேர்ந்தசையாம்” எ-து, ஒற்றளபெழுந்தாற் குற்றெழுத்தாம்; அன்றி முன்னின்றவெழுத்துடனேகூடி நிரையசையாய் நில்லாது குற்றெழுத்தின் மாத்திரையைப்பெற்று, நேரசையாகவேநிற்கும், “ஒற்றிலையேலொற்ற மொற்றளபாம்” எ-து, ஒற்றில்லாதவிடத்து ஒற்று உண்டாக்கலாம்; அந்தவொற்றிலு மமைதிபிறவாதபோது தோற்றினவொற்றையே யளபாக்கலாம்; ‘மைதீரொற்றின்றியும் செய்யுட் கெடினொற்றையுண்டாக்குங் - குன்றுமேலொற்றளபுங்கொள்’ என்பதனுட்கண்டுகொள்க. ‘செறிவிலீரொற்று மூவொற்றுமோரொற்றாம்’ எ-து, அந்நியமாய் ஈரொற்றுவந்தாலும், மூவொற்றுவந்தாலு மோரொற்றாகவே நிற்கும்; “ஈரொற்றாயினுமூவொற்றாயினு, மோரொற்றியலவென்மனார் புலவர்”என்னு மிதனுட்காண்க. ‘முன்சார்ந்தகுறில்விட்டிசைக்கில்நேராம், எ-து, ஆதியிலேவிட்டிசைத்துக்குற்றெழுத்துவந்தால நேரசையாம்; “வெண்பாவெண்டளையலதுதயங்காது மயங்கிடுமெ்பாவும்” எ-து, வெண்பாவுக்கு வெண் |