பக்கம் எண் :
 
54சிதம்பரப்பாட்டியல்
யேர்மருவு யரலழற விலங்கா மற்றை
   யெழுத்துர கக்கதிமுன் னிவைவாராதால்.          (8)
 

(24)

வானிலகு நேர்குருவே நிரையாம் வெண்சீர்
   வரில்நபத வகணநாட் பரணி மும்மீன்
ஊனமிகு புனர்பூசம் பூசம் வாணா
   ளுற்றபுகழ் சூனியநோய் பலன்க ளாகுந்
தேனனையாய் வஞ்சிச்சீ ரடைவே நான்குந்
   திகழ்சரம யகணநாட் சோதி யாரல்
தானமுறு கேட்டைசத யந்தான் கேடு                (9)
   சாவுதிரு மகிழ்ச்சிபலன் றரத்தொ டங்கும்.
 

(25)

துறக்கமதி வான்பருதி காய்ச்சீர் முன்னுஞ்
   சூழ்காற்றுத் தீநிலநீர் கனிச்சீர்ப் பின்னு
நிறுத்துகண மிவ்விரண்டா மகவற் சீரின்
   நேரீ று வெள்ளைச்சீர் நிரைவஞ் சிச்சீர்
சிறப்புடையிவ் விரண்டுமாங் கணப்பேர் மற்றுந்
   திகழியற்சீ ரயன்றிருக்கோக் கருடன் முன்னாம்
வெறுத்தபின்னு மாமென்ப விறைவ னாட்கு
   மேவுகண நாட்பொருத்தம் வேண்டு மாதே.       (10)
 

(26)

ஆவதுமங் கலத்தேற்ற பரியா யச்சொ
   லடைகொடுத்து முதற்சீருக் கடுத்த செய்யுண்
மேவுதலை யிடைகடைமங் கலச்சொல் வைத்து
   விதியெழுத்துப் பால்வருண மயங்கு மென்ப
வாவுமொரு நற்கதியால் முன்னோர் நூலின்
   மங்கலத்தால் நஞ்சுசில வமுத மாகுந்
தூவமுத மெனிற்கதியிற் பழுது போமேற்
   றொடர்கலப்பா மரபினதுதொடக்கஞ் சொல்வாம்.  (11)
 

            பொருத்தவியன் முற்றும்