மரபியல். |
(27) | துறுகொலைநீக் கித்தெய்வக் காப்பாய்ச் சுற்றத் தொகையளவு வகுப்பகவல் விருத்தந் தன்னால் முறைகாப்புச் செங்கீரை தால்சப் பாணி முத்தம்வா ரானையம் புலியி னோடு சிறுபறைசிற் றிற்சிறுதே ரிவைபின் மூன்றுந் தெரிவையர்க்குப் பெறாகழங்கம் மானை யூசல் பெறுமூன்று முதலிருபத் தொன்று ளொற்றை பெறுந்திங்க டனிற்பிள்ளைக் கவியைக் கொள்ளே. (1) |
(28) | கொண்டபுயந் தவமதங்கம் மானை காலங் குறங்களிசம் பிரதமறம் பாண்கார் தூது வண்டுதழை கைக்கிளைசித் திரங்க லூசல் மடக்குமருட் பாவகவல் விருத்தம் வெண்பா வெண்டுறைவஞ் சித்துறையா சிரியம் வஞ்சி விருத்தப்பாக் கலியினமந் தாதி யாகக் கண்டவைமுன் னாதியொரு போகு வெண்பாக் கலித்துறைநேர் கூறல்கலம் பகமா மன்றே. (2) |
(29) | அன்புறுதே வர்க்குநூ றிழிபைந் தையர்க் கரசர்க்குத் தொண்ணூறு வணிகர்க் கைம்பா னின்புறுமுப் பானுழவர்க் கமைச்சி னுள்ளோர்க் கெழுபதெனுங் கலம்பகத்தம் மானை யூசல் முன்பொருபோ கொழித்தது பன்மணிமா லைப்பேர் மொழிவெள்ளை நூறுகலித் துறைநூ றாதல் நன்குறிலந் தாதிகலித் துறைநா னூறாய் நடப்பதகப் பொருட்கோவை நாம மன்னோ. (3) |
(30) | மன்னிருபான் வெள்ளைகலித் துறையி ரட்டை மணிமாலை நூறுவெள்ளை யகவல் வஞ்சி பின்னர்கலித் துறையதிணை மணிமா லைப்பேர் பேசகவல் வெள்ளைகலித் துறைமுப் பானாற் |