| சொன்னதுமும் மணிக்கோவை வகுப்பு முப்பான் சூழொலியந் தாதிவெள்ளை யகவற் பாவாற் பன்னுமிரு பாவிருப திவையந் தாதி பயோதரங்கண் ணுரைத்திடிலப் பேர்ப்பத் தாமால். (4) |
(31) | பத்தியல்வெண் பாவின்மலை நதிநா டூர்தார் பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின் மெத்துதசாங் கப்பத்தாந் தசாங்கந் தன்னை வெண்பாவாற் றொண்ணூறேழ் பஃது முப்பா னித்தகைமை மொழிவதுசின் னப்பூ வாகு மெழிற்கொடைசெங் கோனாடூர் வில்வாள்வேன்மா அத்திதனித் தனியகவல் விருத்தம் பத்தா லறைவிருத்த விலக்கணமா மமுதச் சொல்லாய். (5) |
(32) | சொற்கலித்தா ழிசையகவல் விருத்த மாதல் சுற்றமுடன் றாழிசையாய்ச் சொல்வ தூசல் வற்கவுயிர் கசதநப மவவெட்டின்சூழ் மருவகவல் வரின்வருக்க மாலை வெள்ளை நற்கலியின் றுறையகவ லந்தா தித்த நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர் மேலோ ரொற்கமிலா சிரியவிருத் தத்தைக் கூட்டி லொருநாற்பான் நான்மணிமா லைக்கென் றோதே (6) |
(33) | ஓதும்வெள்ளை கலித்துறையா சிரியமன்பா வுறுவிருத்தம் வகுப்பைந்தா லுரைக்கி லம்ம கோதிலலங் காரபஞ்ச கப்பே ரெட்டுக் குலவகவல் விருத்தமுறு தெய்வங் காப்பா மீதட்ட மங்கலமிப் படியொன் பானா மெத்துநவ மணிமாலை யெப்பாட் டேனுந் தீதிலொரு பானொருபா வொருபஃ தென்ப செப்பிவைக ணான்கையுமந் தாதி தன்னால். (7) |
(34) | அகவல்விருத் தம்வகுப் பாதல்பத் தாதி யந்தநூ றாகும்பல் சந்த மாலை |