பக்கம் எண் :
 
 மூலமும் உரையும்57

புகழகவ லாற்புலவர் பாணர் கூத்தர்
   பொருநர்முத லவருரையாற் றெகிர்ப்பா டாக
பகருமதாற் றுப்படையாங் கலிவெண் பாவாற்
   பாதாதி கேசங்கே சாதி பாத்
மகிழவுரைத் திடிலந்தப் பேரா மந்த
   வகையுரைக்கின் வெளிவிருத்தத் தங்க மாலை.    (8)
 

(35) 

மாசில்குல மகளுக்கு வகுப்பு வெண்பா
   வருபொருளொன் பானொன்பா னாகப் பாடிற்
றேசுயர்மங் கலவெள்ளை வேந்தர்க் குண்மை
   திகழ்கீர்த்தி யுரைப்பதுமெய்க் கீர்த்தி வஞ்சி
பேசுகுணப் பேரடுக்கி மடவார்க் கோதிற்
   பெரும்புகழ்ச்சி மாலையப் படியாண் பாற்கு
மாசகல வுரைக்கிலது நாம மாலை
   வருங்காம மொருதலைக்கைக் கிளைய தாகும்.     (9)
 

(36) 

குழமகனை யடையாளங் கலிவெண் பாவாற்
   கூறியவன் மறுகணையக் காதல் கூரேழ்
பிற்பேதை பதினொன்று பெதும்பை பன்மூன்
   றியன்மங்கை பத்தொன்பான் மடந்தை யையைந்
தழகரி வை முப்பதஃதோர் தெரிவை நாற்பா
   னாம்வயது பேரிளம்பெண் முதலா யுள்ளோர்
தொழவுலாப் போந்ததுலாத் தலைவன் பேர்க்குத்
   தொடையெதுகையொன்றிலின்ப மடலாய்ச்சொல்லே
                                            (10) 

(37)

சொன்னமா தரைக்கண்டு கனவிற் சேர்ந்தோன்
   துணிவன்மட லென்றதுலா மடல்பாங் கற்கு
ளின்ன லுரைத் திடுதலனு ராக மாலை
   யிருதிணையை விடறூதிவ் வைந்து முப்பாப்
பன்னுபொரு ளிடங்காலந் தொழின்முப் பானாற்
   பானெழுபான் தொண்ணூறு நூறால் வெண்பா
மன்னுகலித் துறையாதல் புகலப் பேரான்
   மாலையுமா மெண்ணாலு மருவும் பேராம்.        (11)