அமர்க்கள வஞ்சி என்பது
செருக்கள வஞ்சி எனவும் வழங்கும் செருவில்
மாண்டாருடலையும், கரியுடல், பரியுடலையும் காகம், கழுகு, நாய், நரி, பேய்
முதலியவை தின்று களத்தாடும் சிறப்பைச் செப்பல் இதுவாம்.
(பி - ம்.)
1 பாதம் மயங்கும்வஞ் சிப்பாட்டி லாட வரைப்பரவி. 2
ஓதில 3 னப்போது நால் வஞ்சி (23)
| |
ஆனைத்
தொழில்
|
| |
|
| 49.
|
பிறந்த நிலங்குல மோக்க மளவு பிராயமெழில்
சிறந்தமாக் கோபக் 1கிரமத்தில் விட்ட கதிர்சினத்தால்
இறந்துயிர் கோடல் செயக்கண் டிறைகந் தினிற்பிணித்தல்
உறைந்திடும் வஞ்சி யுரமுடை யானைத் தனித்தொழிலே |
(உரை
I). எ - ன், ஆனைத் தொழிலாமா றுணர்த்...............................று.
(இ - ள்).
ஆனை பிறந்த தேசமும், அதன்குல நன்மையும், தனது
ஓக்கமும், அளவும், பிராயமும், கோபக்கிரமத்தால் அதனை நிலைநின்று
நீக்கியவாறும், அது சினமிகுதியாற் கொலை புரிந்தவாறும் கூறிப் பின்பு
அரசன் கந்தினை யணையெனச் சேர்த்தவாறும் உரைக்கும் வஞ்சி யானைத்
தொழிலாம் எ - று.
(உரை II).
எ - து...................ஆசிரிய விருத்தமாக முந்நூறு
பாடப்படுவது ஆனைவிருத்தமென்றவாறு.
(கு - ரை).
ஓக்கம்-உயர்ச்சி, கந்து - கட்டுத் தறி. இறந்து - வரம்பு
கடந்து. இறை - அரசன். மதங்கொண்டு திரியும் யானைகளை அடக்குதல்
மன்னர்க்குரிய சிறந்த லட்சணங்களுள் ஒன்றென்பது மணிமேகலை,
பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய நூல்களால் தெரிய வரும்.
(பி - ம்.) 1 கிரமத்தி
லெட்டாங்கத் துச்சினத்தால் (24)
| |
நயனப்பத்து,
பயோதரப்பத்து, பொன்னூசல்
|
| |
|
| 50. |
+அரசர்
விருத்தங் கலித்துறை யீரைந்து கண்மூலைமேற்
பரசி னயனம் பயோதரஞ் சேர்ந்த விருத்தமென்ப
வரன்முறை சுற்றத் தளவாம்பொன் னூசல் வடிவுதுற்றே
உரைசெய் கலித்தா ழிசையேபொன் னூசலென் றோதுவரே. |
|
|
|