என்னும் பாட்டுச் செவிலி கூற்றன்றாயினுந் தலைவன் மனையறங்கண்டு கூறியதன் பாற்படுமெனக் கொள்க. |
அறிவர் கூற்று |
152. | சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. | |
பி. இ. நூ. |
நம்பிகம் 104, இல. வி. 472.. |
(13) |
முன்வரு நீதியும் ... அறிவர்க்கும் உரிய |
இளம் |
என்னுதலிற்றோவெனின் அறிவர் கூற்று நிகழ்த்துமாறுணர்த்திற்று. |
இ-ள் : மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும்1 உரிய என்றவாறு. |
உதாரணம் மேற்காட்டப்பட்டன |
நச் |
இஃது, அறிவரது கூற்றுக் கூறுகின்றது. |
இதன் பொருள் : முற்கூறிய நல்லவையுணர்த்தலும் அல்லவை கடிதலுமாகிய கிளவி செவிலிக்கேயன்றி அறிவர்க்குமுரிய என்றவாறு. |
என்றது, அறியாத தலைவியிடத்துச் சென்று அறிந்தார் முன்னுள்ளோர் அறம் பொருளின்பங்களாற்கூறிய புறப்புறச் செய்யுட்களைக் கூறிக் காட்டுவரென்பதாம். |
உதாரணம் |
“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யுமழை” |
(குறள் -55) |
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித்தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” |
(குறள் -56) |
1 அறிவர் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவர். |