பக்கம் எண் :

கற்பியல் சூ.13215
 

“மனைத்தக்க மாண்புடையளாகித்தற் கொண்டான்
வளைத்தக்காள் வாழ்க்கைத்துணை”

(குறள் - 51)
 

இவை நல்லவையுணர்த்தல்.
 

“எறியென்றெதிர் நிற்பாள் கூற்றஞ்சிறுகாலை
யட்டிற் புகாதா ளரும்பிணி-யட்டதனை
யுண்டி யுதவாதா ளில்வாழ்பே யிம்மூவர்

கொண்டானைக் கொல்லும்படை”
1

(நாலடி-363)
 

“தலைமகனிற்றீர்ந் தொழுகல்தான் பிறரிற்சேற
னிலைமையிறீப் பெண்டிர்ச் சார்தல் - கலனணிந்து
வேற்றூர்புகுதல் விழாக்காண்டனோன்பெடுத்தல்
கோற்றொடியார் கோளழியுமாறு”

(அறநெறி-94)
 

இவை  அல்லவை  கடிதல்,    இவை  அறிவர்    கூற்றாதலிற்  புறப்  புறப்  பொருளாயிற்றென உணர்ந்து
கொள்க.
 

153.

இடித்துரை நிறுத்தலும் அவர தாகும்
கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்.
 

(14)

இளம்
 

என்-எனின், அறிவர்குரியதோர் மரபு உணர்த்திற்று.
 

(இ-ள்)  கழறிய  எல்லையின்    கண்ணே    நிறுத்தலும்  அறிவர்க்குரிய,   தலைவனும், தலைவியும் அவர்
ஏவல்வழி நிற்றலின் என்றவாறு,
 

உதாரணம்
 

“உடுத்துந்தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடுதுவன்றி
விழவொடு வருதி நீயே இஃதோ


1 பொருள் : அடிப்பாய்   என்று   எதிர்த்து நிற்பவள் கூற்றம்; சிறு காலைப் பொழுதில் அட்டிற்பக்கம்
சென்று  உணவு அடும்  தொழில்  செய்யாதவள் நோய் சமைத்த உணவைப் பரிமாறாதவள் பேய். இம்
மூவரும் கணவனைக் கொல்லும் படைபோல்வாராவார்.