பக்கம் எண் :

216தொல்காப்பியம் - உரைவளம்
 

ஓரான் வல்சிச்சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென

இனிவிழ வாயிற் றென்னும் இவ்ஊரே”
1

(குறுந் - 295)
 

இது தலைமகற்குக் கூறியது.
 

“துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்
பீர்ந்தண் எருமைச் சுவல் படுமுது போத்துத்
தூங்குசேற்றள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக் கொடிப் பகன்றை சூடிமூதூர்ப்
போர்ச்செறி மள்ளரிற் புகுதரும் ஊரன்
தேர்தர வந்த தெரியிழை நெகிழ்தோள்
ஊர்கோள் கல்லா மகளிர் தரத்தரப்
பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுநீ
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை
அதுபுலந் துறைதல் வல்லியோரே
செய்யோணீங்கச் சில்பதங் கொழித்துத்
தாமட்டுண்டு தமியராகித்
தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுநர் ஆதலறிந்தும்

அறியார் அம்மஃதுடலுமோரே”
2

(அகம் - 316)
 

இது தலைவிக்குரைத்தது.
 

நச்
 

இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.


1 பொருள்:  தலைவ!  தழையுடையுடுத்தும் மலர் தொடுத்துச் சூடியும் பொன் அணிகள் பூண்டும் மலரைக்
கூந்தலில்  செருகியும் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டமொடு விழாக் கொண்டு வருகின்றாய். ஆனால்
இவ்வூரார்,  ‘இதோ  பார்’ என்று ஒருவருக்கொருவர், ‘இத்தலைவன் வாழ்க்கை ஒரு பசுவின் வளத்தால்
உண்ணும்  வறிய  வாழ்க்கை;  அது  இப்பேரழகுக்  குறுமகள்  வாழ்க்கைத்  துணையாக வந்தமையால்
இப்பொழுது  அவன்  விழவயரும்  சிறப்புடையதாயிற்று’  என்று  கூறுவர். இவ்வாறு கூறுவதன் மூலம்
அறிவர் தலைமகனைத் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்தினார் எனக் கொள்க.

2 பொருள்: பக்கம் 169-170 ல் காண்க.