பக்கம் எண் :

கற்பியல் சூ.14217
 

இதன்பொருள்   :  -  கிழவனுங்  கிழத்தியும்  அவர்  வரை  நிற்றலின்  -  தலைவனுந்  தலைவியும்
அவ்வறிவரது ஏவலைச் செய்து நிற்பராதலின் இடித்துவரை நிறுத்தலும் அவரது   ஆகும்.   அவரைக் கழறி
ஓரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் என்றவாறு.
 

அஃது,  உணர்ப்புவயின்  வாராது  ஊடிய    தலைவி  மாட்டு  ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது
ஊடினாளையுங் கழறுப.
 

“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயேயிஃதோ
வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென

வினிவிழவாயிற் றென்னுமிவ்வூரே”
1

(குறுந் - 295)
 

இது தலைவனைக் கழறியது.
 

“மனைமாட்சியில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினுமில்”

(குறள் - 52)
 

இது, தலைவியைக் கழறியது.
 

தலைவன் ஊடல்
 

154.

உணர்ப்புவரை யிறப்பினும் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற் குரிய.
 

(15)

பி. இ. நூ.
 

இறையனார் அகப்பொருள் 45
 

உணர்ப்புவயின் வாராவூடல் தோன்றின்
புலத்தல் தானே கிழவற்கும் வரையார்.

 

தமிழ்நெறி விளக்கம் 25.
 

கிழவன் புலத்தலும் ... ஆயிடைப் பிரிவே.


1 பொருள்: பக்கம் 216ல் காண்க.