பக்கம் எண் :

களவியல் சூ. 11 113

யன்ன நிகர்க்குஞ்சீ ராடமை மென்றோளி
ரென்ன பெயரிரோ நீர்”1

இது பெயர் வினாயது,

“நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா
லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ
வேமரை போந்தன வீண்டு”2      (திணை மாலை-1)

“தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கா
லெங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார்-நுங்குறிப்பின்
வென்றிபடர் நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ
வன்றி படர்ந்த வழி”

வன்றி-பன்றி

“தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை
மண்டுபு கவரு மாண்டகிளி மாற்று
மொண்டொடிப் பணைத்தோ ளொண்ணுத லிளையீர்
கண்டனி ராயிற் கரவா துரைமின்
கொண்டன குழுவி னீங்கி மண்டிய
வுள்ளழி பகழியோ டுயங்கியோர்
புள்ளி மான்கலை போகிய நெறியே” 3

இவை கெடுதி வினாயின.

“மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக்
கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ”4      (அகம்-110)


1. கருத்து: நெருங்கிய கதிருடைய தினைப் புனம் காப்பவர்களே! அன்னப் பறவை ஒத்த நடைச்சீரையும் அசையும் மூங்கில் போலும் தோளையும் உடையவர்களே! உங்களை ஒன்று கேட்டறிவேன் என்ன பெயருடையீர் நீங்கள்? கூறுக.

2. கருத்து: பக்கம் 90ல் காண்க.

3. கருத்து: தினைக்கதிரை யுண்ண வரும்கிளிகளை ஓட்டுகின்ற இளையவர்களே! தன் கூட்டத்தின் நீங்கி அம்பு பட்டவுடம்புடன் ஒரு மான் போன வழியைப் பார்த்தீராயின் கூறுமின்.

4. மெல்லிய பரந்த இலையில் நீவிர் இடும் உணவையுண்டு ஆரவாரமிக்க சிறு குடியில் தங்கினால் என்ன குறைவரும்?

தொ-8