யரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிரசா பத்தியம்” ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப்பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவை போற் பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது; “தனக்கொத்த வொண்பொருடன் மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையாற் பேணி-யினக்கொத்த ஈரிடத் தாவை நிறீஇயிடையீவதே ஆரிடத்தார் கண்டமண மாம்”, தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது. “நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த வேள்வி விளங்கழன் முன்னிறீஇக்-கேள்வியாற் கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே தெய்வ மணத்தார் திறம்” ஆசுரமாவது:- கொல்லேறு கோடல் திரிபன்றியெய்தல் வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல்: “முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனி னிவையிவை செய்தாற் கெளியண் மற்றிவளெனத் தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித் தன்னவை யாற்றிய வளவையிற்றயங்க றொன்னிலை யசுரந் துணிந்த வாறே”. இராக்கதமாவது: தலைமகடன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது. “மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே யென்ப-வலிதிற் பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ ளிராக்கதத்தார் மன்ற லியல்பு”. |