மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம் வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின் சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின் ஆயித ழுண்கண் பசப்பத் தடமென்தோள் சாயினும் ஏஎர் உடைத்து” (கலித்-112) என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று. நச். இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது. (இ-ள்) : எதிர்சொல்-அங்ஙனம் மடனும் நீங்கிய சொல்லை; அவள்வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின்-தோழியிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்ல வாகையினாலே; கூற்று மொழி ஆன-குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின என்றவாறு. எதிர்தல்-தன்றன்மை மாறுபடுதல், “ஒன்றிய தோழியொடு” (41) என அகத்திணையிற் கூறுதலானும், ‘தாயத்தினடையா (221) எனப் பொருளியலிற் கூறுதலானும் அவள்வயின் நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்துமென்றான். அவை முற்காட்டிய உதாரணங்களுள், “கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து’ (கலி-46) எனவும், “வளைமுன்கைபற்றி நலியத் தெருமந்திட்டு (கலி-51) எனவும், “காமநெரிதரக் கைந் நில்லாதே” (குறுந்-149) எனவும், கூறிய வாற்றானும், மேற் கூறுகின்ற உதாரணங்களானும் நாணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க.
1. கருத்து: மாயப் பொதுவனாகிய அவன் உரைத்த உரையெலாம் எப்படிப் பட்டனவோ? உண்மையான ஆயின் அவனொடு மனைவாழ்க்கைப் பட்டோமாவோம். பொய்யாயின் நின் உண்கண் பசலையடைய மென்தோள்கள் மெலியினும் உன்மேனி ஓர் அழகுடைத்தேயாம். |