இதனுள் ‘பின்னும் வருவன் என்றிருந்தேன், அதனான் எள்ளினேன்’ என்பது கருத்து. “................................... ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன் மாறினென் எனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரல்நொச்சிப் பாடோர்க்கும் செவியோடு பைதலேன் யானாக” 1 (கலித்-46) இஃது எள்ளினாயென நினைத்தான் என்ற வழிக் கூறியது. விட்டுயிர்த் தழுங்கியதற்குச் செய்யுள்: பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவன்கொல் தோழி கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கும் மணிநிற மாலைப் பொழுது”2 (திணைமொழி-9) எனவும், “மரையா உகளும் மரம்பயில் சோலை உரைசார் மடமந்தி ஓடி உகளும் புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம் உரையா உழக்கும்என் நெஞ்சு”3 (கைந்நிலை-6) எனவும் வரும். நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள்: “மன்றத் துறுகற் கருங்கண் முசுஉகளுங் குன்றக நாடன் தெளித்த தெளிவினை
1. கருத்து: பக்கம் 164-ல் காண்க. 2. கருத்து: தோழீ! மணிமலை நாடன் பிணி நிறமாகிய பசலை நீங்கி தோள் பருக்கக் காலத்தைக் கணிக்கும் பொன்னிற வேங்கை மலரில் அமர்ந்து வண்டார்க்கும் இந்த அழகிய மாலைப் பொழுதில் வருவானோ? 3. கருத்து: காட்டுப்பசு துள்ளித் திரியும் சோலையில் மந்திகள் துள்ளியோடும்படியான மலை நாடனது மார்பானது என் நெஞ்சைத் தேய்த்து அங்கேயே நடமாடிக் கொண்டிருக்கும். |