“நெஞ்சத்தார் காதல வராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து”1 (குறள்-1128) எனவும் வரும். உறங்காமையும், உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தம் பிறவுஞ் சொல்லுதல், இவ்வழி நீ வருந்தாதி நின் மாட்டு அன்பு பெரிதுடையன் எனத் தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையாற் கூறியதற்குச் செய்யுள்: “சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்குமலை நாடன் வரூஉம் மருந்தும் அறியுங்கொல் தோழியவன் விருப்பே” 2 (ஐங்குறு-262) எனவரும். பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள்: “அம்ம வாழி தோழி பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய தண்ணந் துறைவன் மறைஇ அன்னை அருங்கடி வந்து நின்றோனே” 3 (ஐங்குறு-115) எனவும், “முளைவளர் முதல” என்னும் அகப்பாட்டினுள் “.............................வேட்டோர்க்கு
1. கருத்து: நெஞ்சத்தில் காதலர் இருத்தலால் சூடான உணவை அவர்க்குச் சுடும் என்றஞ்சி உண்ண மாட்டேன். 2. கருத்து: தோழீ! தினைமேய்ந்த பன்றி தன் துணையுடன் வதியும் மலைநாடன் வருவதே என் நோய்க்கு மருந்தாம். இதை அவன் உள்ளம் (விருப்பம்) அறியுமோ. 3. கருத்து: தோழீ! கேட்பாயாக. நுண்ணிய மணல் சேர்ந்த கடற்கரையில் நம்மொடு ஆடிய தண்ணந் துறைவன் இன்று மறைந்து கடத்தற்கரிய தாயின் காவலமைந்த வீட்டின் புறத்தே வந்து நின்றான். |