கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே” 1 (குறுந்-113) இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத் தலைவிக்குக் கூறுமாறு: “ஒலிவெள் ளருவி ஒங்குமலை நாடன் சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொல்முரண் சோருந் துன்னருஞ் சோலை நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி நாமே” 2 (குறுந்-88) எனவரும். வேண்டாப் பிரிவினும் என்பது-புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு. இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரிவென்றார். அதுதாளா........வென்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித்தணத்தலும் ஒன்று. அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் தலைவற்குரைத்தனவும் உளவாம். அவை வருமாறு:- “இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்முதிர்பு நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறி யாயின் இவளே
1. கருத்து: தலைவ! எம் ஊர்க்கு அணிமையில் உள்ளது ஒரு பொய்கை. அதற்கு அணியது கான்யாறு. அதன் பக்கத்தில் இரைதேடும் குருகு வருவதல்லது மக்கள் வழக்கம் இல்லாத பொழில் உண்டு. அங்கு எம் கூந்தலுக்கு எருமண் கொணர வருவேன். தலைவியும் உடன் வருவாள். 2. கருத்து: தோழீ! அடைதற்கரிய மலைச்சாரலில் இடையாமத்தும் நின்னைக்காண வருவர். அதனால் ஊர் அலருக்கு நாணும் நாணத்தை விடுவேமாக. |