பக்கம் எண் :

களவியல் சூ. 25409

“மணியில் திகழிதரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு”1      (குறள்-1273)

அளவு மிகத் தோன்றினும் என்பது-பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு.

“கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது”2      (குறள்-1272)

தலைப்பெய்து காணினும் என்பது-தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு.

பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க.

“..............................................................................
மிடையூர் பிழியக் கண்டனென்”      (அகம்-158)

எனவரும்.

கட்டினும் என்பது-கட்டு வைப்பித்தவழியும் அவர் சொற்கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.

கழங்கினும் என்பது-கழங்கு வைத்துழியும் அவர் சொற்கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு.

வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது-செவிலியும் நற்றாயும் பொருந்தியபக்கத்துக் கண்டு வெறியாடுவாமென்றவழித் தலைவிசெய்திக் கண்ணுந்தோழியை வினாவும் என்றவாறு.

ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது-வெறியாடிய சென்றவழி அதற்கழிவுறுவிடத்து வரினும் என்றவாறு.


1. கருத்து: மாலையில் உள்ள மணியின் உள்ளே விளங்கும் நூல்போல என் மகளின் அழகில் உள்ளே விளங்குவதான ஓர் எண்ணம் உண்டு; அஃது யாது?

2. கருத்து: கண் நிறைந்த அழகையும், மூங்கில் போன்ற தோளையும் உடைய பேதைக்குப் பெண்களிடத்தில் நிறைந்த மடமை அளவுக்கு மிஞ்சியுள்ளது.