அஃதாவது “கடவுட் கற்சுனை” எனத் தொடங்கும் நற்றிணைப்பாட்டில், “நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே”1 (நற்றிணை-34) எனத் தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியுங் காரணமென்னை யென வினாவும். காதல் கைம்மிகக் கனவி னரற்றலும் என்பது-காதன் மிகுதியால் தலைவனையுள்ளிக் கனவின்கண் அரற்றுதற்கண்ணும் வினாவும். தோழியை வினாதலும் என்பது-இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும் என்றவாறு. எனவே களவலராதல் முதற் கனவினரற்றலீறாக ஓதிய வொன்பது கிளவியும் தோழியை வினாதற் பகுதி. அவை நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாதலென ஒரு கிளவியாக எண்ணற்க. தெய்வம் வாழ்த்தலும் என்பது-இவ்வாறு பட்டதெனத் தோழியுரைத்தவழியிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றாதாள் தெய்வத்தை வேண்டிக் கோடல். போக்குடன் அறிந்த பின்.. நிற்றற் கண்ணும் என்பது-தலைவனுடன் போயினாள் என்று அறிந்தவழித் தானும் தோழியோடு கெழுமி இல்லறத்தின்க ணிறுத்தற்கண்ணும் என்றவாறு. “பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற்
1. கருத்து: முருகனே! இவட்கு வந்த நோய் நின் வருத்துதலால் வந்ததன்று என்பதை நீ அறிந்திருந்தும் வெறிக்களத்தில் வேலன் வேண்ட வந்தாய். நீ கடவுளாயினும் ஆக. அறியாமையுடையவன் தான். |