பக்கம் எண் :

களவியல் சூ. 25423

வருமுலை வெப்பங் கொழுநற் போற்றிய
சென்றன ளம்மநின் றோழி யவனோடு
என்றினி வருஉ மென்றனள்
வலந்துரை தவிர்ந்தன் றலர்ந்த வூரே”

இது, செவிலி கற்பினாக்கத்து நின்றமை தோழி கூறியது.

பிரிவின் எச்சத்தும்-தலைவி உடன்போயவழித் தான் பின் செல்லாதே எஞ்சுதலும் உளவாதலின் ஆண்டுக் கூறுவனவும்.

(உ-ம்):

“தெறுவ தம்ம நும்மகள் விருப்பே
யுறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப்
பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க
நாடிடை விலங்கிய வெற்பிற்
காடிறந் தனணங் காத லோளே”1      (ஐங்குறு-313)

இது பின்செல்லாது வருந்தியிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது.

இது, நற்றாய் கூற்றாய்ச் செவிலிமேன’ ஆயிற்று.

மகள் நெஞ்சு வலிப்பினும்-உடன் போக்கிற்கு மகள் நெஞ்சு துணியினும்.

தன்மேல் அன்பு நீங்கியது உணர்ந்து செவிலி கூறும்.

(உ-ம்)

“பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றன
ளினியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்


1. கருத்து: மிக்க துன்பத்தோடு நெஞ்சம் உயிர்போமாறு மெலிந்து பாழ்படும். தன்னை நாம் நினைத்தலாற் கலக்கம் எய்த நம் காதலோளாகிய மகள் நாடிடையிட்ட இடங்களையுடைய காட்டு வழியில் தன் கேள்வனுடன் சென்றனள். அவள்பால் (நம் மகள்) கொண்ட விருப்பம் நம்மை வருத்துவதாயிற்று.