‘கிழத்திக்கில்லை’ எனவே தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறுதலுளதென்பது பெற்றாம். தலைவிக்குக் குறிப்பானன்றித் தலைவன் முன்னின்று கூறும் வேட்கைக் கூற்றின்மை முற்கூறிய செய்யுட்களுட் காண்க. எனவே தோழி முன்னர்த் தலைவிக்கு வேட்கைக்கூற்று நிகழ்தல் பெற்றாம். (உ-ம்) “சேணோன் மாட்டிய நறும்புகை” (குறுந்-150) “ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த” (அகம்-8) என்பனவும், “இவளே, நின் சொற் கொண்ட” என்றாற்போல் வருவனவும் முன்னர்க் காட்டினாம். “கடும்புனன் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்த மண்ணுநீர் போல நடுங்கஞர் தீர முயங்கி நெருந லாக மடைதந் தோளே”1  (அகம்-62) என்றாற் போல்வன தலைவி வேட்கையைத் தலைவன் குறிப்பான் உணர்ந்தன. வெள். இது தலைவிக் குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) : வேறு வேறாகக் காதல் செய்தொழுகும் அறிவில் லாதாரைப் போன்று பலர்க்கும் புலனாகத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்னர்ச் சொல்லும் சொல் நினைக்குங் காலத்துத் தலைவியிடத்து நிகழ்தல் இல்லை. அவ்விடத்துத்
1. கருத்து: நேற்று வேகமாக ஓடும் நீர்மிக்க காவிரியாகிய பெரிய யாற்றில் நீண்டசுழியுடைய வெள்ளத்தில் மூழ்குபவள்போல நடுங்கும் துயர் ஏற்க நாம் காக்கச் சென்ற போது, நமது நல்ல ஆகத்தை அடைந்து முயங்கினாள். |