பக்கம் எண் :

களவியல் சூ. 31 435

தினைக் கூற்றானன்றிக் குறிப்பானாதல் சிறைப்புறத்தானாதல் தோழியானாதல் உணர்த்துமென்பதாம். தலைவன் களஞ் சுட்டுமாயின் யாண்டானும் எப்பொழுதானும் அக்களவொழுக்கம் நிகழ்ந்து பிறர்க்கும் புலனாய்க் குடிப்பிறப்பு முதலியவற்றிற்குத்தகாதாம்.

“விரியிணர் வேங்கை”

என்னும் (28) அகப்பாட்டுத் தலைவி களஞ் சுட்டியது. ‘மறந்திசின் யானே’ என்றலின் இது குறிப்பான் உணர்த்திற்று. பிறவும் வந்துழிக் காண்க.

வெள்.

இது களவொழுக்கத்திற் குறியிடமிதுவெனக் குறிக்கும் பொறுப்பு தலைமகட் குரியது என்கின்றது.

(இ-ள்) : இயற்கைப்புணர்ச்சிக்குப்பின் தலைவனது சொல்லின் வரம்பினைக் கடத்தல் தலைமகட்கு அறமன்றாகலானும் தான் செல்லுதற்குரிய வழி அவ்விட மாதலானும் தாங்கள் இருவரும் மீண்டும் கண்டு அளவளாவுதற்குரிய இடத்தைக் குறிப்பிடும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும், எ-று

அவன் என்றது தலைவனை. வரம்பு என்றது அவன் பணித்த சொல்லாகிய எல்லை. இறத்தல்-கடத்தல். அறம் கற்பிற்காகிய நெறிமுறை. ‘தனக்கு அறம் அன்மையின்’ என இன்னும், ‘தான் செலற்குரிய வழி ஆகலான்’ என ஆனும் ஏதுப் பொருளில் வந்தன.

தலைவியின் உடன்பாடு பெற்றுத் தோழியாற் குறியிடம் சுட்டப்பட்டுத் தலைவன் தலைவியைக் கூடும் இடம் என்றது, பாங்கியின் உதவி பெற்றுத் தலைமகளைக் கண்டு அளவளாவும் பாங்கியிற் கூட்டத்தின் பகற்குறி இரவுக்குறியாகிய இடங்களை.

தோழியும் குறியிடம் கூறல்

119. தோழியின் முடியும் இடனுமார் உண்டே      (31)

ஆ. மொ.

இல.
There may be places of meeting fixed by the maid-friend.