பக்கம் எண் :

458தொல்காப்பியம்-உரைவளம்

ஆற்றல்-ஒன்றனை முடிவு போக்கல். உம்மை-எச்சவும்மை1 மதியுடம்படுத்தலேயன்றிக் கூட்டவும் பெறுமென்க.

இருவகைக் குறியிடம்

128. குறிஎனப் படுவது இரவினும் பகலினும்
 அறியக் கிளந்த ஆற்றது என்ப      (40)

ஆ. மொ.

இல.

The act of fixing the meeting place can be either at night or in day-they say.

இளம்.

என்பது, மேல் ‘களஞ் சுட்டுக் கிளவி கிழவியதாகும்’ என்றார். அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தையுடைத்து என்றவாறு.

எனவே இரவிற் குறி, பகற்குறி என இருவகைப்படும் என்பது கொள்ளப்படும்.

நச்.

அங்ஙனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது.

(இ-ள்) : குறியெனப்படுவது-குறியென்று சொல்லப்படுவது, இரவினும் பகலினும்-இரவின்கண்ணும்பகலின்கண்ணும், அறியத் தோன்றும் ஆற்றது என்ப-தலைவனுந் தலைவியுந்தானும் அறியும்படி தோன்றும் நெறியையுடைய இடம் என்றவாறு.


1. எச்சவும்மை-இறந்தது தழீஇய எச்சவும்மை. அது ‘குறையுறவுணர்தல்’ முதலிய முன்னர்க் கூறிய மூன்றையும் தழுவுகிறது.