பக்கம் எண் :

களவியல் சூ. 42 463

பகற் குறியிடம்

150. பகற்புணர் களனே புறன்என மொழிப
 அவள்அறி வுணர வருவழி யான      (42)

ஆ. மொ.

இல.

The day meeting-place will be outside the house, the way to which being known to her.

இளம்.

என்றது பகற்குறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : பகற்குறியாகிப் புணருமிடம் எயிற்புறன்1 என்று சொல்லுவர். ஆண்டுந் தலைமகள் அறிவுற்று வரும் இடனாகல் வேண்டும் என்றவாறு.

நச்.

இது முறையானே பகற்குறி உணர்த்துகின்றது.

(இ-ள்) : அவள் அறிவு உணர வருவழி ஆன பகற்புணர்களனே-களஞ் சுட்டிய தலைவி அறிந்தவிடந் தலைவன் உணரும்படியாக வருவதோரிடத்து உண்டான பகற்புணருங் குறியிடத்தை, புறன்என மொழிப-மதிற்புறத்தே யென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

அறிவு, ஆகுபெயர்2.

(உ-ம்)

“புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த
மின்னே ரோதியென் றோழிக்கு”

எனவும்,


1. எயிற்புறம் என்றது வீட்டின் எல்லையாக அமைந்த எயிலின் புறத்தேயுள்ள இடங்களையும், ஊர்ப்புறத்தே தலைவி ஆயத்துடன் போந்து விளையாடும் பொழிலின்கண் அமைந்த மறைப்பிடத்தையும் ஆம்.

2. அறிவு-அறிவு என்பது அறிந்த இடத்துக்கு ஆகி வருதலின் ஆகுபெயர்.