வாறு காண்க. அம்மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் ஈண்டுக் கூறியுணர்க. (உ-ம்) “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனுமில” (குறள்-1100) “கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற் செம்பாக மன்று பெரிது”1 (குறள்-1092) இதனை நான்கு வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க. (உ-ம்) “பானலந் தண்கழிப் பாடறிந்து தன்னைமார் நூனல நுண்வலையாற் கொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண்ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு”2 (திணை-நூற்-32) இனி, முயங்கி மகிழ்ந்து கூறுவன. “கோடலெதிர் முகைப் பசுவீமுல்லை நாறிதழ்க் குவளையோடிடைப் படவிரைஇ யைது தொடை மாண்ட கோதை போல நறியணல்லோண் மேனி முறியினும் வாயது முயங் கற்குமினிதே”3 (குறுந்-62) “தம்மிலிருந்து தமது பாத்துண்டற்றா லம்மா வரிவை முயக்கு”.4 (குறள்-1107)
1. கருத்து: அவள் கண்ணில் உள்ள என்னைக் களவு கொண்டு பார்க்கும் சிறிய நோக்கம் காமப் புணர்ச்சிக்கு உடன்படும் பாதியளவினதன்றி முழுமையும் உடையதாகும். 2. பொருள் முன்னர் எழுதப்பட்டது. பக். ல் காண்க. 3. பொருள்: காந்தள் மலர் முல்லையரும்பு குவளை மலர் ஆகியவற்றை இடையிடை வைத்துத் தொடுக்கப்பட்டமாலை போலும் நல்ல மணமுடைய நல்லவளாகிய இவளின் மேனி தளிர் போலாயது; முயங்குதற்கும் இனி தாய் அமைவது-இது தலைவன் கூற்று. 4. தலைவன் கூற்று: தம் உழைப்பால் அமைத்த இல்லில் இருந்து கொண்டு தாம் ஈட்டிய பொருளைப் பிறர்க்குப் |