பக்கம் எண் :

களவியல் சூ. 48 479

இளம்.

என்றது தந்தையும் தன்னைமாரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : தந்தையும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு.

எனவே, கூற்றினான் உரைக்கப் பெறார் என்றவாறு.

நச்.

இது தந்தையுந் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது.

(இ-ள்) : தந்தையுந் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக் கொண்டுணர்வர் என்றவாறு.

நற்றாய் அறத்தொடு நின்ற வழியும்,

“இருவர்கட் குற்றமு மில்லையா லென்று
தெருமந்து சாய்த்தார் தலை”      (கலி-39)

என்றலின் முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக் கொண்டு உணர்ந்தாராயிற்று.

136. தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும்      (48)

ஆ. மொ.

இல.

Knowing by her mother is as by the faster-mother.

இளம்.

என்றது, நற்றாய்க்கு உரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : நற்றாய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுதலல்லது தந்தையையும், தன்னையன்மாரையும் போல வெகுடலிலள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின்,