“காமர் கடும் புனல்’ எனத் தொடங்கும் கலித்தொகைப் பாட்டினுள், “அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என்னையர்க் குய்த்துரைத் தாள்யாய்” ;(கலித்-39) எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது. “அவரும் எதிரிகளை நோக்கிக் கண்சேந்து ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி” (கலி-39) என்றதனான் வெகுட்சி பெற்றாம். நச். இது தந்தை தன்னைக்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்து மாறு கூறுகின்றது. (இ-ள்) : தாய் அறிவுறுதல்-நற்றாய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந்தன்மை, செவிலியோடு ஒக்கும்-செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் என்றவாறு. என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்ற வாறாயிற்று, அது, “எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குற்றுரைத்தாள் யாய்1 (கலி-39) என்பதனால் உணர்க. இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல உணரு மென்று பொருள் கூறில் ‘தாய்க்கும் வரையார்’ (116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம். களவு வேளிப்படத் தலைவன் காரணன் 137. | அம்பலும் அலரும் களவு வெளிப் படுத்தலின் | | அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் (49) |
ஆ. மொ. இல, AS the talk of some or the talk of many about the love-affair makes known the secret love, the cause for such talk devolves upon the lover. |