மையன் மானின மருளப்பையென வெந்தாறு பொன்னினந்தி பூப்ப வையறி வகற்றுங் கையறு படரோ டகலிரு வானமம்ம மஞ்சினம் பகலாற்றுப்படுத்த பழங் கண்மாலைக் காதலற் பிரிந்த புலம்பினோதக வாரஞ ருறுநரரு நிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரினலைத்தலானா தெள்ளற வியற்றிய நிழல் காண்மண்டிலத் துள்ளூ தாவியிற் பைப் பயநுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந் திதுகொல் வாழி தோழி யென்னுயிர் விலங்கு வெங்கடு வளியெடுப்பத் துலங்குமாப் புள்ளிற் றுறக்கும் பொழுதே”.1 (அகம்-71) இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவனெக் கூறுதன் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடைய வெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் ‘மரபினவை’ யெனப் பன்மை கூறினார். சிவ. இச்சூத்திரம் களவொழுக்கத்தில் இயற்கைப் புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலியவற்றுக்கு முன்னர் நிகழும் இருவர் உணர்வுகளையும் கூறுகின்றது.
1. கருத்து: தலைவி தோழியிடம் கூறியது. தோழீ! இயல்பாகவே துன்பம் தரும் மாலையானது, காதலனைப் பிரிந்த தனிமையால் மேலும் துன்புறும்படி, புண்ணால் துயருறுவார் மார்பில் குறிவைத்துக் கூரிய வேலை யெறிவது போல அலைக் கழித்தல் அடங்காது; அதனால் என் உயிர், சூறாவளிக் காற்று வீச மரத்தினின்றும் எழும் புள்ளினைப்போல் என் உடம்பினைத் துறக்கும் போது கண்ணாடி மண்டிலத்து ஊதியபோது படியும் ஆவி மெல்ல மெல்லச் சுருங்குவது போல மிக அழிந்து தன் வலிமை குறையும். இதுவே என் இப்போதைய நிலை. |